நத்தார் தினத்தை முன்னிட்டு கத்தோலிக்க தேவாலயங்களில் பாதுகாப்பிற்காக 45 ,000 போலீஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்தியாவசிய இடங்களில் இராணிவ பாதுகாப்பை முன்னெடுக்க நடவடிக்கை எடுப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நத்தார் பண்டிகையையொட்டி சிறைச்சாலை கண்காணிப்பாளர்களுக்கு திறந்த வெளி பார்வையாளர்களை காண விசேட சந்தர்ப்பம் வழங்குவதற்கு சிறைச்சாலை திணைக்களம் தீர்மானித்துள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர், சிறைச்சாலை ஆணையாளர் காமினி.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.