EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு ஆரோக்கியம்
அளவிற்கு அதிகமாக எலுமிச்சை ஜூஸ் எடுத்துக்கொண்டால் ஏற்படும் ஆபத்துக்கள்.

அளவிற்கு அதிகமாக எலுமிச்சை ஜூஸ் எடுத்துக்கொண்டால் ஏற்படும் ஆபத்துக்கள்.

தை 15, 2025
வகை: ஆரோக்கியம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
A A
Share on FacebookShare on Twitter

விற்றமின் சி நிறைந்த எலுமிச்சை ஜூஸ் அல்லது சாறு நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். இருப்பினும், எதையும் அளவிற்கு அதிகமாகப் பயன்படுத்துவது தீங்கு விளைவிக்கும். விற்றமின் சி உங்கள் உடலுக்கு மிகவும் முக்கியமான சத்து. இந்த ஊட்டச்சத்து நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது என்பதோடு, சருமம் மற்றும் கூந்தலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. ஆனால், அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த சிட்ரஸ் பழமான எலுமிச்சையின் சாற்றை வெதுவெதுப்பான நீரில் கலந்து காலையில் எழுந்தவுடன் குடித்து வந்தால் உடல் எடை குறைய ஆரம்பிக்கும். இதனுடன், எலுமிச்சை நமது செரிமானத்தை வலுப்படுத்தி, வயிறு தொடர்பான பல பிரச்சனைகளை போக்கும்.

இந்தியாவின் பிரபல சுகாதார நிபுணர் நிகில் வாட்ஸ், எலுமிச்சை ஜூஸ் அதிகமாக குடிப்பது ஏன் நம் உடலுக்கு நல்லதல்ல என்று கூறினார். விற்றமின் சி உங்கள் உடலுக்கு மிகவும் முக்கியமான சத்து என்றாலும் அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

எலுமிச்சையில் விற்றமின் சி நிறைந்துள்ள நிலையில், இந்த சத்து நம் உடலில் அதிகரித்தால், அது சிறுநீரகம் மற்றும் எலும்பு உள்ளிட்ட பல முக்கிய உறுப்புகளை பாதிக்கிறது, எனவே பல மருத்துவர்களும் இதை அளவோடு உட்கொள்ள அறிவுறுத்துகிறார்கள்.

சிறுநீரக கல் பிரச்சனை: அளவிற்கு அதிகமான விற்றமின்-சி உணவுகளை எடுத்துக்கொள்வது சிறுநீரக கற்களுக்கு வழிவகுக்கும். ஏனெனில் உடலில் சேரும் கூடுதல் விற்றமின்-சி சத்தினை ஆக்சலேட் வடிவில் சிறுநீர் மூலம் வெளியேற்றுகிறது. ஆனால், சில சமயங்களில் மற்ற தாதுக்களுடன் கலந்து சிறு படிகங்களாக மாறி சிறுநீரகக் கல்லாக மாறுகிறது.

எலும்புகளின் அசாதாரண வளர்ச்சி: உடலில் அதிகப்படியான விற்றமின்-சி, அசாதாரண எலும்பு வளர்ச்சியை ஏற்படுத்தும். மூட்டுகளில் அசாதாரணமாக வளரும் எலும்புகள் காரணமாக வலி, பலவீனம் போன்ற பிரச்சனைகள் உண்டாகலாம்.

செரிமான பிரச்சனை: அளவிற்கு அதிக விற்றமின் சி காரணமாக, வயிற்றில் அமில சுரப்பு அதிகரிக்கலாம். அதோடு எலுமிச்சை ஜூஸை அதிகம் குடிப்பதால் வாந்தி, வயிற்றுப்போக்கு, குமட்டல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய் உள்ளவர்கள் எலுமிச்சை தண்ணீரை குறைவாக குடிக்க வேண்டும்.

வாய் புண்கள்: தேவைக்கு அதிகமாக எலுமிச்சை ஜூஸ் குடித்தால், அதில் உள்ள சிட்ரிக் அமிலம் வாய்வழி திசுக்களில் வீக்கத்தை ஏற்படுத்தும். இதன் காரணமாக வாயில் வலி, புண்கள், எரிச்சல் ஏற்பட ஆரம்பிக்கும்.

பலவீனமான பற்கள்: சாக்லேட் போலவே, எலுமிச்சை ஜூஸை அதிகம் குடிப்பதால், பற்கள் வலுவிழக்கலாம் என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.

 

 

தொடர்புடைய செய்திகள்

ஆரோக்கியமான வாழ்விற்கு  அவரை!
அண்மைய செய்திகள்

ஆரோக்கியமான வாழ்விற்கு அவரை!

வைகாசி 10, 2025
இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 10 மே 2025
அண்மைய செய்திகள்

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 10 மே 2025

வைகாசி 10, 2025
ரோஜாப்பூ தேநீர் தரும் ஆரோக்கியம்
அண்மைய செய்திகள்

ரோஜாப்பூ தேநீர் தரும் ஆரோக்கியம்

வைகாசி 9, 2025
தர்பூசணி விதையில் இருக்கும் நன்மைகள்
அண்மைய செய்திகள்

தர்பூசணி விதையில் இருக்கும் நன்மைகள்

வைகாசி 5, 2025
பலாப்பழத்தில் இருக்கும் நன்மைகள்
அண்மைய செய்திகள்

பலாப்பழத்தில் இருக்கும் நன்மைகள்

வைகாசி 4, 2025
பாதாம் பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
அண்மைய செய்திகள்

பாதாம் பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

வைகாசி 3, 2025
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

ரணில் விக்ரமசிங்கவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி இடமாற்றம்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி அமோகமாகி இருக்கும் – ரணில்

7 நாட்கள் முன்னர்
இணைத் தலைவர்களை சந்தித்த சுமந்திரன்…

இணைத் தலைவர்களை சந்தித்த சுமந்திரன்…

3 நாட்கள் முன்னர்
அருட்கலாநிதி சந்துரு பெர்னாண்டோவுக்கு கௌரவ முனைவர் பட்டம்…

அருட்கலாநிதி சந்துரு பெர்னாண்டோவுக்கு கௌரவ முனைவர் பட்டம்…

2 நாட்கள் முன்னர்
நல்லூர் மற்றும் காரைநகரில் ஆட்சி அமைத்தால் சபைகளை சிறப்பாக நடத்துவோம் – சட்டத்தரணி வி. மணிவண்ணன்

நல்லூர் மற்றும் காரைநகரில் ஆட்சி அமைத்தால் சபைகளை சிறப்பாக நடத்துவோம் – சட்டத்தரணி வி. மணிவண்ணன்

6 நாட்கள் முன்னர்
மன்னாரில் கேரள கஞ்சா பொதிகள் மீட்பு…

மன்னாரில் கேரள கஞ்சா பொதிகள் மீட்பு…

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In