10 ஆவது நாடாளுமன்றத்தின், கோப் எனப்படும் அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஒன்பதாவது பாராளுமன்றத்தில் அந்தக் குழுவின் தலைவராக லசந்த அழகியவண்ண செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த குழுவின் பணிகளாக அரசாங்கத்தினதும் அதன் அமைச்சுகள், திணைக்களங்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் ஆகியவற்றினதும் முகாமைத்துவ வினைத்திறனையும் நிதி ஒழுக்காற்றையும் ஆராய்வது ஆகியவை காணப்படுகின்றன.