EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
யாழில். போராட்டத்திற்கு தடை விதிக்க கோரிய பொலிசாரின் மனு தள்ளுபடி.

யாழில். போராட்டத்திற்கு தடை விதிக்க கோரிய பொலிசாரின் மனு தள்ளுபடி.

தை 30, 2025
வகை: இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணத்தில் நாளைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள கவனயீர்ப்பு போராட்டத்திற்கு தடை விதிக்க கோரிய பொலிசாரின் மனுவை யாழ் . நீதவான் நீதிமன்று தள்ளுபடி செய்துள்ளது.

யாழ்ப்பாணத்திற்கு நாளைய தினம் வெள்ளிக்கிழமை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வருகை தரவுள்ள நிலையில் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்க திட்டமிட்டு இருந்தனர்.

அந்நிலையில் நேற்றைய தினம் புதன்கிழமை, நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன், வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் ச.சசிகரன், போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் பிரபாகரன், குரலற்றவர்களின் குரல் அமைப்பின் தலைவர் முருகையா கோமகன், தற்காலிக சுகாதார உத்தியோகஸ்தர்கள் சங்க தலைவர் எஸ்.ஜெஸ்மின் ஆகிய ஐவரின் பெயரை குறிப்பிட்டு, நாளைய தினம் யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் போராட்டங்களை நடாத்த தடை விதிக்க வேண்டும் என பொலிஸார் மன்றில் மனு தாக்கல் செய்தனர்.

குறித்த மனு மீதான விசாரணைக்காக பெயர் குறிப்பிட்ட ஐந்து நபர்களையும் மன்றில் முன்னிலையாகுமாறு மன்று அழைப்பு கட்டளை நேற்றைய தினம் விடுத்திருந்தது.

அந்நிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை, அழைப்பு கட்டளை வழங்கப்பட்ட நபர்கள் மன்றில் முன்னிலையாகி இருந்தனர்.

அதில் வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவரின் சார்பில் மன்றில் முன்னிலையான சிரேஸ்ட சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் , வேலையற்ற பட்டதாரிகள் தமது கோரிக்கையை முன் வைத்து , ஜனாதிபதியின் கவனத்தினை ஈர்க்கும் முகமாக அமைதியான வழியில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்க உள்ளோம்.

அமைதியான முறையில் பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் விடுக்காது, எமது கோரிக்கையை முன் வைத்து போராடவுள்ளனர். அதற்கு மன்று அனுமதி வழங்க வேண்டும் என விண்ணப்பம் செய்தார்.

சட்டத்தரணியின் விண்ணப்பத்தினை அடுத்து, உயர் பாதுகாப்பு வலயமாக கட்டமைக்கப்படும் பகுதிக்குள் செல்லாது , ஜனாதிபதி வரும் பாதையில், வீதிக்கு குறுக்காக செல்லாது, வீதியின் ஓரமாக கவனயீர்ப்பு போராட்டத்தை அமைதியான முறையில் முன்னெடுக்க மன்று அனுமதித்தது.

தொடர்புடைய செய்திகள்

யாழில்.கழிவுகளை கொட்டும் இடங்களில் சிசிடிவி பொருத்த நடவடிக்கை….
அண்மைய செய்திகள்

யாழில்.கழிவுகளை கொட்டும் இடங்களில் சிசிடிவி பொருத்த நடவடிக்கை….

வைகாசி 23, 2025
யாழில் சுகயீனத்தால் ஒருவர் உயிரிழப்பு…
அண்மைய செய்திகள்

யாழில் சிகிச்சை பலனின்றி முதியவரொருவர் உயிரிழப்பு…

வைகாசி 23, 2025
வவுனியா மாநாகரசபையால் அங்காடி வியாபார கொட்டகை அகற்றம்…
அண்மைய செய்திகள்

வவுனியா மாநாகரசபையால் அங்காடி வியாபார கொட்டகை அகற்றம்…

வைகாசி 23, 2025
பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த சந்தோஷ் நாராயணன்…
அண்மைய செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த சந்தோஷ் நாராயணன்…

வைகாசி 22, 2025
யாழிற்கு இலவச நீர் விநியோக திட்டம்….
அண்மைய செய்திகள்

யாழிற்கு இலவச நீர் விநியோக திட்டம்….

வைகாசி 22, 2025
அண்மைய செய்திகள்

தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி உடன் இருவர் கைது

வைகாசி 21, 2025
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

யாழில் சுகயீனத்தால் ஒருவர் உயிரிழப்பு…

யாழில் சிகிச்சை பலனின்றி முதியவரொருவர் உயிரிழப்பு…

1 நாள் முன்னர்
குற்றவியல் நடவடிக்கை முறைச்சட்டக்கோவை தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்மானம்

குற்றவியல் நடவடிக்கை முறைச்சட்டக்கோவை தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்மானம்

4 நாட்கள் முன்னர்
தேசிய மக்கள் சக்திக்கு கைகொடுக்க சுயேச்சைக் குழுக்கள் தீர்மானம்

தேசிய மக்கள் சக்திக்கு கைகொடுக்க சுயேச்சைக் குழுக்கள் தீர்மானம்

4 நாட்கள் முன்னர்
AI செய்தி தொகுப்பாளரை அறிமுகம் செய்தார் அசாம் முதல்வர்

AI செய்தி தொகுப்பாளரை அறிமுகம் செய்தார் அசாம் முதல்வர்

6 நாட்கள் முன்னர்
வவுனியா மாநாகரசபையால் அங்காடி வியாபார கொட்டகை அகற்றம்…

வவுனியா மாநாகரசபையால் அங்காடி வியாபார கொட்டகை அகற்றம்…

1 நாள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In