தமிழ் ஊடகப் பரப்பில் தனக்கென தனி இடம் பதித்த சிரேஷ்ட ஊடகவியலாளர் பாரதி சற்று முன்னர் யாழ்ப்பாணத்தில் காலமானார்.
உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த அவர் இன்று காலமானதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
தினக்குரல்பத்திரிகையின் பிரதம ஆசிரியராக இருந்த பாரதி அவர்கள் அரசியல் ஆய்வு மற்றும் கலை செயற்பாடுகளில் மிகுந்த ஆளுமை உள்ளவராக காணப்பட்டதோடு அண்மையில் வீரகேசரியின் சிரேஷ்ட ஊடகவியலாளராக யாழ் காரியாலய பொறுப்பு அதிகாரியாகவும் கடமை ஆற்றியமை குறிப்பிடத்தக்கது.