EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
எத்தனை வழக்குகளை போட்டாலும் நாங்கள் அடிபணிய மாட்டோம் – MK சிவாஜிலிங்கம்

module:0facing:0; hw-remosaic: 0; touch: (0.22500002, 0.22500002); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

எத்தனை வழக்குகளை போட்டாலும் நாங்கள் அடிபணிய மாட்டோம் – MK சிவாஜிலிங்கம்

மாசி 14, 2025
வகை: இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
A A
Share on FacebookShare on Twitter

இவ்வாறு எத்தனை வழக்குகளை போட்டாலும் நாங்கள் அடிபணிய மாட்டோம் என MK சிவாஜிலிங்கம் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.

கிளிநொச்சி நீதிமன்றில் இடம்பெற்ற வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய சுதந்திர தின எதிர்ப்பு போராட்டத்துக்கு எதிராக பொலிசாரால் தொடரப்பட்ட வழக்கு கிடப்பில் போடப்பட்ட நிலையில் கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்கும் போராட்டம் போன்று யாழ்ப்பாணத்திலிருந்து கிழக்கு நோக்கிய போராட்டத்தை அடக்கும் நோக்கில் வழக்குகள் போடப்பட்டிருந்தன.

இதில் காணாமல் செய்யப்பட்டவர்களின் பிரதிநிதிகள், குறித்த போராட்ட அமைப்பு சார்பில் வேழன் சுவாமிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் என பலருக்கு வழக்கு போடப்பட்டு அலக்களிக்கப்பட்டோம்.

இவ்வாறு எத்தனை வழக்குகளை போட்டாலும் நாங்கள் அடிபணிய மாட்டோம் என்பதை காட்டுவதற்காக நாங்களும் தொடர்ந்து போராடிக் கொண்டு இருக்கின்றோம்.

சட்டத்தரணிகளும் எங்களுக்கு பூரண ஆதரவை தந்து கொண்டு இருக்கின்றார்கள். மக்கள் போராட்டத்தை ஒரு போதும் அடக்க முடியாது என்பதை நாங்கள் நிரூபிப்போம் என MK சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

இதே வேளை குறித்த வழக்கு தொடர்பில் கருத்து தெரிவித்த வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத் தலைவி கலாரஞ்சினி குறிப்பிடுகையில்,

வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய பயணத்திலே, அடைப்பதற்கு இலங்கை அரசாங்கம் வழக்குகள் மூலம் பல முயற்சிகளை எடுத்தது. பல வழக்கு தவணைகளுக்கு அழைக்கப்பட்டு அலக்களிக்க முடிந்ததே தவிர, எங்களது போராட்டத்தையும், தூரநோக்கு பயணத்தையும் இவர்களால் நசுக்க முடியாமல் போனது.

இன்றைய தினம் நாங்கள் வழக்குக்கு சமூகமளித்திருந்த போது, நீதிமன்றத்தில் கூடியிருந்த அத்தனை சட்டத்தரணிகளும் ஒன்றாக எழுந்து எங்களுக்காக பேசி நீதிபதியினால் வழக்கு கிடப்பில் போடப்பட்டுள்ளது.

கிடப்பில் போடப்பட்ட வழக்கு எந்த காலப்பகுதியில் மீண்டும் எடுக்கப்பட்டு எமக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முயற்சிப்பார்களோ தெரியவில்லை.

இருந்தாலும், எமது தூரநோக்கத்துக்கான தொடர்ச்சியான போராட்டம், எமக்கான நிரநதரமான அரசியல் தீர்வு கிடைக்கும் வரைக்கும் ஜனநாயக ரீதியில் எமது போராட்டம் தொடரும் என அவர் தெரிவித்தார்.

 

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்

தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி உடன் இருவர் கைது

வைகாசி 21, 2025
பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை ஆராயும் குழு இன்று கூடுகின்றது
அண்மைய செய்திகள்

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை ஆராயும் குழு இன்று கூடுகின்றது

வைகாசி 20, 2025
முக்கிய அரசியல்வாதிகளுக்கு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் நேரடி தொடர்பு – அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு
அண்மைய செய்திகள்

முக்கிய அரசியல்வாதிகளுக்கு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் நேரடி தொடர்பு – அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு

வைகாசி 20, 2025
தேசிய மக்கள் சக்திக்கு கைகொடுக்க சுயேச்சைக் குழுக்கள் தீர்மானம்
அண்மைய செய்திகள்

தேசிய மக்கள் சக்திக்கு கைகொடுக்க சுயேச்சைக் குழுக்கள் தீர்மானம்

வைகாசி 20, 2025
குற்றவியல் நடவடிக்கை முறைச்சட்டக்கோவை தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்மானம்
அண்மைய செய்திகள்

குற்றவியல் நடவடிக்கை முறைச்சட்டக்கோவை தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்மானம்

வைகாசி 20, 2025
தலைமன்னாரில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு தின நிகழ்வு….
அண்மைய செய்திகள்

தலைமன்னாரில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு தின நிகழ்வு….

வைகாசி 19, 2025
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

தலைமன்னாரில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு தின நிகழ்வு….

தலைமன்னாரில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு தின நிகழ்வு….

2 நாட்கள் முன்னர்
இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 10 மே 2025

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 18 மே 2025

3 நாட்கள் முன்னர்
இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்…

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 16 மே 2025

5 நாட்கள் முன்னர்
வெள்ளவத்தையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பதற்றம்

வெள்ளவத்தையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பதற்றம்

3 நாட்கள் முன்னர்
Samsung இன் புதிய அறிமுகம்!

Samsung இன் புதிய அறிமுகம்!

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In