நமது நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறையான ஆயுர்வேத மருத்துவத்தில் ஒரு செடியின் வேர், பட்டை, காய், கனி போன்றவற்றை மருத்துவதிற்குப் பயன்படுத்தியதோடு அதன் பூக்களையும் சிகிச்சைகளுக்கு பயன்படுத்தி வந்திருக்கின்றனர்.
அந்தவகையில் ரோஜாப் பூவை அழகுக்காக மட்டுமின்றி மருத்துவ உலகிலும் பெரிதளவு பயன்படுத்துகின்றனர்.
ரோஜாவிலிருந்து எடுக்கப்படும் தைலம் காதுவலி, காதுப்புண் ஆகியவற்றைக் குணமாக்கும்.
ரோஜா இதழ்களை அவித்துக் குடித்து வந்தால் இரத்தம் சுத்தமடைந்து சருமம் பளபளப்பாகும்.
ரோஜாப்பூவின் சாற்றினை அருந்தினால் மலச்சிக்கல், குடலில் ஏற்பட்ட புண் குணமாகும்.
ரோஜா இதழ்களை ஒரு கையளவு எடுத்து பாத்திரத்தில் போட்டு, 1 கப் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து, இறக்கி வடிகட்டி, அதில் பாதியை எடுத்து சர்க்கரை சேர்த்து காலை, மாலை குடித்துவந்தால் மலச்சிக்கல் விலகும்.
பித்தம் காரணமாக மயக்கம், குமட்டல், வாந்தி, நெஞ்செரிச்சல் மற்றும் பித்தக் கோளாறால் பாதிக்கப்பட்டவர்கள் 2 கைப்பிடியளவு ரோஜா இதழ்களை ஒரு பாத்திரத்தில் போட்டு 2 கப் தண்ணீர் விட்டு நன்றாக கொதித்ததும், வடிகட்டி, காலை, மாலை இருவேளையும் 1 கப் வீதம் குடிக்க வேண்டும். இவ்வாறு 7 நாட்கள் குடித்து வந்தால் பித்தம் நீங்கி விடும்.
ரோஜா இதழ்களை வேளைக்கு 1 கைப்பிடி வீதம் வெறுமனே மென்று சாப்பிட்டால் சீதபேதி குணமாகும்.
ரோஜாப்பூ கஷாயத்துடன் சீரகத்தைச் சேர்த்து அரைத்து, மெல்லிய துணியால் நனைத்து முகர்ந்தால் மூக்கடைப்பு, ஜலதோஷத்தால் ஏற்படக்கூடிய பல்வேறு வகைக் கோளாறுகள் அகலும்