இந்திய அணி 9 ஆவது ஐ.சி.சி.சம்பியன்ஸ் கிண்ண தொடரில் வென்று பி.சி.சி.ஐ பரிசுத்தொகையை தன்வசப்படுத்தியது.
.
குறித்த 9ஆவது ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்று இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின.
இந்த போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி சம்பியன் பட்டத்தையும் வென்றது.
இந்நிலையில், சம்பியன்ஸ் கிண்ணத்தை வென்ற இந்திய அணிக்கு பி.சி.சி.ஐ. 58 கோடி ரூபா (இந்திய மதிப்பில்) பணத்தை பரிசுத்தொகையாக அறிவித்துள்ளது.
அதில், வீரர்கள் மற்றும் பயிற்சியாளருக்கு 3 கோடியும் துணை பயிற்சி ஊழியர்களுக்கு தலா 50 இலட்ச ரூபாவும் பகிர்ந்தளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.