வவுனியா பூந்தோட்டம் காத்தார் சின்னகுளம் வீதியில் இன்று மதியம் இடம்பெற்ற விபத்தில் தொலைபேசி கம்பத்தோடு மோதுண்ட வானின் சாரதி தெய்வாதினமாக உயிர் தப்பிய நிலையில் அங்கிருந்து தப்பியோடினார்.
பூந்தோட்டத்தில் இருந்து மிக வேகமாக சென்ற வேன் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதி ஓரமாக இருந்த தொலைபேசி கம்பத்தோடு மோதுண்டு அருகில் இருந்த வீடு ஒன்றின் வேலிகளையும் உடைத்து விபத்துக்குள்ளாகியது.
இதன் காரணமாக குறித்த வீதியினால் போக்குவரத்து செய்ய முடியாத வகையில் தொலைபேசி கம்பம் முறிந்து காணப்பட்டது.
இந்நிலையில் சாரதி விபத்து இடம் பெற்ற பகுதியிலிருந்து தப்பி ஓடி இருந்ததோடு வவுனியா பொலீசார் விபத்து தொடர்பான விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.