கிளிநொச்சி பிரதேசத்தில் இன்று பெய்த கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
கிளிநொச்சி கரைச்சி பிரதேசத்தில் சரியான வடிகால் அமைப்பு திட்டம் இன்மையால் இன்று பெய்த கனமழை காரணமாக கிளிநகர், ஆனந்தபுரம், இரத்தினபும் கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பல வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததுடன் பல கிணறுகளுக்குள் வெள்ளம் நிறைந்தது.
இதனால் மக்கள் அசெளகரியங்களை எதிர்கொண்டதுடன், பாதிப்பிற்குள்ளாகி உள்ளனர்.