நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச சபைக்கு உட்பட்ட வற்றாப்பளை வட்டாரத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரை கூட்டம் ஒன்று நேற்று மாலை வற்றாப்பளை செந்தமிழ் விளையாட்டு கழக மைதானத்தில் இடம்பெற்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச சபைக்கு உட்பட்ட வற்றாப்பளை வட்டாரத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடுகின்ற ஞானதாஸ் யூட் பிரசாத் , யோகேஸ்வரன் கவிதா , வேகாவனம் அனுறேகா ,ஜெ.விது ஆகியோருக்கு ஆதரவாக குறித்த கூட்டம் இடம்பெற்றது.
கரைதுறைப்பற்று பிரதேச சபை முன்னாள் தவிசாளர் கனகையா தவராசா தலைமையில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயலாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் முன்னாள் வடமாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன், கரைதுறைப்பற்று பிரதேச சபை முன்னாள் தவிசாளர் கமலநாதன் விஜிந்தன் உள்ளிட்ட அதிதிகள் கலந்து கொண்டு கருத்துக்களை வழங்கினர்.