அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் புதிய வரிகள் காரணமாக அதிகரித்துவரும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மை மற்றும் வர்த்தகப் பாதுகாப்பின்மைக்கு கியூபெக் மூலோபாய ரீதியாகப் பதிலளிக்க வேண்டும் என்று கியூபெக் மாகாண முதல்வர் ஃபிராங்கோயிஸ் லெகால்ட் (François Legault) தெரிவித்துள்ளார்.
கியூபெக் மாகாணத்தில் தனது அரசாங்கத்தின் “புதிய பொருளாதார தொலைநோக்குப் பார்வையை” அவர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.
அதன்போது ஆற்றிய உரையிலேயே, கியூபெக் மாகாண முதல்வர் ஃபிராங்கோயிஸ் லெகால்ட் இக்கருத்தைத் தெரிவித்துள்ளார்.
“கியூபெக் பவர்” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த “புதிய பொருளாதார தொலைநோக்குப் பார்வை” திட்டம், மாகாணப் பொருளாதாரத்தைத் தூண்டுவதற்கும் புதிய வேலைகளை உருவாக்குவதற்கும் அரசாங்கத் தலையீடு, பாரிய நீர்மின் விரிவாக்கம் மற்றும் நிர்வாகச் சிக்கல்களைக் கணிசமாகக் குறைத்தல் ஆகியவற்றிலும் கவனம் செலுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.










