தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையானது நீர் விநியோக தடை தொடர்பில் அறிவித்துள்ளது.
இதன்படி கொழும்பு உள்ளிட்ட பகுதிகளுக்கு 12 மணிநேரம் நீர் வெட்டு அமுல்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
நீர்வெட்டு தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
மின்சார விநியோக கட்டமைப்பின் முல்லேரியா உப மின் நிலையத்தில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் இடம்பெறவுள்ளதுடன், தெகிவளை நீர் உந்து நிலையம் மற்றும் மாளிகாவத்தை லைட்ஹவுஸ் நீர் உந்து நிலையம் ஆகியவற்றிலும் மேம்பாட்டு பணிகள் இடம்பெறவுள்ளதால் நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதில் கொழும்பு 1 – 15 வரையான பகுதிகளிலும் புறநகர் பகுதிகளிலும் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
குறிப்பாக ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டே, பத்தரமுல்ல, பெலவத்தை, ஹோகந்தர, கொஸ்வத்தை, தலவத்துகொட ராஜகிரிய, மிரிஹான, மாதிவெல, நுகேகொட, நாவல,கொலன்னாவ, ஐனுர், கொட்டிகாவத்தை, அங்கொட, வெல்லம்பிட்டிய, ஒருகொடவத்தை,கடுவெல, மஹரகம, பொரலஸ்கமுவ மற்றும் பிலியந்தலை போன்ற பகுதியிலும் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.











