EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
வடக்கில் நான்கு மாதங்களில் 7606 நாய்களுக்கு கருத்தடை செய்ய இலக்கு

வடக்கில் நான்கு மாதங்களில் 7606 நாய்களுக்கு கருத்தடை செய்ய இலக்கு

ஆவணி 2, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

வடமாகாணத்தில் வீதியோரங்களில் பெருகிவரும் கட்டாக்காலி நாய்களால் ஏற்படும் விபத்துகள் மற்றும் பல்வேறு சுகாதாரச் சீர்கேடுகளுக்குத் தீர்வுகாணும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட விசேட கருத்தடைச் செயற்றிட்டத்தில் இந்த ஆண்டு 7,606 நாய்களுக்குக் கருத்தடை சிகிச்சை செய்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண விவசாய அமைச்சின் கீழான கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களமும், உள்ளூராட்சி அமைச்சின் கீழான உள்ளூராட்சித் திணைக்களமும் இணைந்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றன.

இத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்காக இந்த ஆண்டு 15 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், மாவட்ட ரீதியாகப் பின்வரும் எண்ணிக்கையான நாய்களுக்குக் கருத்தடை செய்யப்படவுள்ளது.

யாழ். மாநகர சபை – 120 நாய்கள் ஏனைய யாழ். மாவட்ட உள்ளூராட்சி சபைகள் – 5,216 நாய்கள்
கிளிநொச்சி மாவட்டம் (கரைச்சி தவிர்ந்த) – 350 நாய்கள்
முல்லைத்தீவு மாவட்டம் – 750 நாய்கள்,
வவுனியா மாவட்டம் (மாநகர சபை உள்ளடங்கலாக) – 1,170 நாய்கள்

இச்செயற்றிட்டத்தின் முதற்கட்டமாக, வவுனியா மாவட்டத்தில் இதுவரை 72 நாய்களுக்கான கருத்தடை சத்திரசிகிச்சைகள் வெற்றிகரமாக நிறைவுறுத்தப்பட்டுள்ளன.

அதனைத் தொடர்ந்து, ஏனைய மாவட்டங்களிலும் இத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதற்கமைவாக, நாளைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாண மாநகர சபையிலும், நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்றுப் பிரதேச சபையிலும், எதிர்வரும் 23ஆம் திகதி வவுனியா மாநகர சபையிலும் இத்திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

அமைச்சரவை மட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ள புதிய ‘விலங்கு நலச் சட்டத்தின்’ ஏற்பாடுகளுக்கு அமைவாக, விலங்குகளின் உரிமைகள் மற்றும் நலன்களுக்கு அதியுயர் முன்னுரிமை வழங்கப்படுகின்றது.

விலங்குகளின் நலனைக் காப்பதன் ஊடாக ஆரோக்கியமானதொரு சமூகத்தை உருவாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்துக்கு, அனைத்துப் பொதுமக்களும் உரிய தரப்பினரும் பூரண ஒத்துழைப்பை வழங்க முன்வர வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

“மன்னிப்பின் மூலம் தன் மகளுக்கு ஒரு புதிய வாழ்க்கை” – ஜந்தர் மந்தரில் மோடியை அவதூறாகப் பேசிய சிறுமியின் தாய்
அண்மைய செய்திகள்

“மன்னிப்பின் மூலம் தன் மகளுக்கு ஒரு புதிய வாழ்க்கை” – ஜந்தர் மந்தரில் மோடியை அவதூறாகப் பேசிய சிறுமியின் தாய்

ஆவணி 3, 2026
மன்னார் மடு திருத்தல பகுதியில் விபத்து -இளைஞனொருவர் பலி!
இலங்கை

மன்னார் மடு திருத்தல பகுதியில் விபத்து -இளைஞனொருவர் பலி!

ஆவணி 2, 2026
கிளிநொச்சி நீச்சல் தடாக தொகுதி புனரமைப்பிற்கான  அடிக்கல் நாட்டல்
அண்மைய செய்திகள்

கிளிநொச்சி நீச்சல் தடாக தொகுதி புனரமைப்பிற்கான அடிக்கல் நாட்டல்

ஆவணி 2, 2026
பலாலியில் 7 ஆவது வாரம் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்
அண்மைய செய்திகள்

பலாலியில் 7 ஆவது வாரம் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

ஆவணி 2, 2026
வவுனியாவில் குறைந்த வருமானம் பெறும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட புலமைப்பரிசில்கள்
இலங்கை

வவுனியாவில் குறைந்த வருமானம் பெறும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட புலமைப்பரிசில்கள்

ஆவணி 2, 2026
யாழில் வெடிகொளுத்தியவர் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

யாழில் வெடிகொளுத்தியவர் உயிரிழப்பு

ஆவணி 2, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

சிறப்புச் செய்திகள்

வடக்கில் நான்கு மாதங்களில் 7606 நாய்களுக்கு கருத்தடை செய்ய இலக்கு

வடக்கில் நான்கு மாதங்களில் 7606 நாய்களுக்கு கருத்தடை செய்ய இலக்கு

7 மணத்தியாலங்கள் முன்னர்
அதிக கட்டணம் வசூலித்த தனியார் வைத்தியசாலைக்கு 5 இலட்சம் அபராதம்

அதிக கட்டணம் வசூலித்த தனியார் வைத்தியசாலைக்கு 5 இலட்சம் அபராதம்

4 நாட்கள் முன்னர்
கியூபெக்கில், 4 மில்லியன் மெத்தம்பெட்டமைன் மாத்திரைகள் மற்றும் அதிநவீன கருவிகளுடன் இரகசிய ஆய்வகம்! – மூவர் மீது வழக்குப்பதிவு

கியூபெக்கில், 4 மில்லியன் மெத்தம்பெட்டமைன் மாத்திரைகள் மற்றும் அதிநவீன கருவிகளுடன் இரகசிய ஆய்வகம்! – மூவர் மீது வழக்குப்பதிவு

2 நாட்கள் முன்னர்
தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற மாணவனுக்கு விசேட பாராட்டு

தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற மாணவனுக்கு விசேட பாராட்டு

5 நாட்கள் முன்னர்
புளியங்குளத்தில் பேருந்து, மோட்டார் சைக்கிள் மோதி விபத்து – ஒருவர் பலி

புளியங்குளத்தில் பேருந்து, மோட்டார் சைக்கிள் மோதி விபத்து – ஒருவர் பலி

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In