கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முரசுமோட்டை மூன்றாம் யூனிற் பகுதியில் உழவியந்திரத்தின் சில்லு ஏறி நான்கு வயது ஆண் குழந்தை உயிரிழந்துள்ளது.
அக்குழந்தையின் உறவினரான 18 வயதுடைய ஒருவர் வீட்டில் நின்ற உழவியந்திரத்தை எடுக்க முற்பட்டவேளை, உழவியந்திர பெட்டியிலிருந்த குழந்தை தவறி வீழ்ந்து உழவியந்திரத்தின் சில்லில் சிக்கி உயிரிழந்துள்ளது.
சம்பவத்தில் ரதிஸ்குமார் டாருசன் என்ற 04 வயதுடைய குழந்தையே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவமானது நேற்று மாலை (21) இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த குழந்தையின் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.











