EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
வடக்கில் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் தொடர்பிலான விசேட  ஆராய்வு

வடக்கில் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் தொடர்பிலான விசேட ஆராய்வு

ஆவணி 25, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

வடக்கு மாகாணத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் நீர் வழங்கல் மற்றும் சிறிய, நடுத்தர தொழில் முயற்சிகள் தொடர்பான திட்டங்களின் பெறுபேறுகள், மக்களுக்கு ஏற்பட்டுள்ள பயன்கள் மற்றும் எதிர்கால முன்னேற்றங்கள் குறித்து மேற்கொள்ளப்படும் ஊடகப் பயணத்தின் ஒரு பகுதியாக வடக்கு மாகாணத்துக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியால் அழைத்து வரப்பட்ட ஊடகக் குழுவினர், மாகாணத்தின் அபிவிருத்தி நிலைமைகள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுடன் கலந்துரையாடினர்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆதரவுடன் வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்களைப் பார்வையிடுவதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் எதிர்வரும் 26ஆம் திகதி வரை மேற்கொள்ளப்படும் ஊடகப் பயணத்தின் ஒரு பகுதியாக, ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கை வதிவிடப் பணிக்குழுவைச் சேர்ந்த அதிகாரிகளும் உள்நாட்டு அச்சு ஊடகங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்களும் நேற்றைய தினம் திங்கட்கிழமை வடக்கு மாகாண ஆளுநரை ஆளுநர் செயலகத்தில் சந்தித்தனர்.

இலங்கையில் நீர் மற்றும் சிறிய, நடுத்தர தொழில் துறைகளில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பங்களிப்பையும், குறிப்பாக வறுமையைக் குறைத்தல், பிராந்திய சமத்துவமின்மையைக் குறைத்தல் மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றில் இத்திட்டங்கள் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தையும் பொதுமக்களுக்கு எடுத்துச் செல்வதே இந்தப் பயணத்தின் நோக்கமாகும்.

தாளையடியில் அமைக்கப்பட்டுள்ள கடல்நீரை நன்னீராக்கும் திட்டம், தீவகப் பகுதிகளில் முன்னெடுக்கப்படும் தொடர்புடைய நீர் முயற்சிகள் மற்றும் யாழ்ப்பாணத்தில் சிறிய, நடுத்தர தொழில் முயற்சி நிலையங்கள் உள்ளிட்ட திட்டங்களைப் பார்வையிடும் வகையில் ஊடகக் குழுவின் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் திட்டங்களின் நடைமுறைப் பெறுபேறுகள் மற்றும் பயனாளர்களின் அனுபவங்களை நேரடியாகப் பதிவு செய்வதற்கான வாய்ப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் திட்டங்களின் மூலம் வடக்கு மாகாணத்தில் உருவாக்கப்பட்டுள்ள உட்கட்டமைப்பு வசதிகள், அவற்றின் தற்போதைய நிலை மற்றும் எதிர்காலத் தேவைகள் தொடர்பில் ஆளுநரும் ஊடகக் குழுவினரும் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.

மாகாணத்தின் நீர் வளம், குடிநீர் பாதுகாப்பு, விவசாயம், தொழில் முயற்சிகள் மற்றும் பிராந்திய பொருளாதார வளர்ச்சி ஆகிய துறைகளில் தொடர்ந்து முதலீடுகள் தேவைப்படுவதும் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.

இச்சந்திப்பில் ஆளுநரின் செயலாளர், ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கை வதிவிடப் பணிக்குழுவின் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள், முதன்மை திட்ட அலுவலர், மூத்த தொடர்பாடல் அலுவலர், நிதித்துறை அலுவலர் மற்றும் திட்ட உதவியாளர் ஆகியோர் அடங்கிய குழுவும் உள்நாட்டு அச்சு ஊடகங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்களும் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம்
இலங்கை

தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம்

ஆவணி 25, 2026
நல்லூரில் அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்றவருக்கு அபராதம்
அண்மைய செய்திகள்

நல்லூரில் அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்றவருக்கு அபராதம்

ஆவணி 25, 2026
யாழ் போதனாவிற்கு மருந்துகளை ஏற்றி வந்த வாகனம் கொக்காவில் பகுதியில் தடம்புரள்வு
அண்மைய செய்திகள்

யாழ் போதனாவிற்கு மருந்துகளை ஏற்றி வந்த வாகனம் கொக்காவில் பகுதியில் தடம்புரள்வு

ஆவணி 25, 2026
காணிகளை விடுவிக்க முப்படையினரிடம் அறிக்கை கேட்டுக்கொண்டு இருப்பது ஏற்புடையதல்ல – எம்.ஏ சுமந்திரன்
அண்மைய செய்திகள்

காணிகளை விடுவிக்க முப்படையினரிடம் அறிக்கை கேட்டுக்கொண்டு இருப்பது ஏற்புடையதல்ல – எம்.ஏ சுமந்திரன்

ஆவணி 25, 2026
தேசிய மாவீரன் பண்டாரவன்னியனின் 223ஆவது ஞாபகார்த்த விழா
அண்மைய செய்திகள்

தேசிய மாவீரன் பண்டாரவன்னியனின் 223ஆவது ஞாபகார்த்த விழா

ஆவணி 25, 2026
யாழில். நகைகளை திருடிய குற்றத்தில் கைதான மூவர் விளக்கமறியலில்
அண்மைய செய்திகள்

யாழில். நகைகளை திருடிய குற்றத்தில் கைதான மூவர் விளக்கமறியலில்

ஆவணி 25, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

புதிய சட்டமூல வரைவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி

புதிய சட்டமூல வரைவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி

7 நாட்கள் முன்னர்
காணாமல் போன 31 பேரை கண்டறிந்துள்ளோம் – மகேஷ் கட்டுலந்த தெரிவிப்பு

காணாமல் போன 31 பேரை கண்டறிந்துள்ளோம் – மகேஷ் கட்டுலந்த தெரிவிப்பு

20 மணத்தியாலங்கள் முன்னர்
பலாலியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் தொடர்ந்துள்ள  வழக்கு

பலாலியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் தொடர்ந்துள்ள வழக்கு

7 நாட்கள் முன்னர்
மகாவலி ஆற்றிலிருந்து மீட்கப்பட்ட  ஆணின் சடலம்

மரத்தில் இருந்து வீழ்ந்து குடும்பஸ்தர் மரணம்!

7 நாட்கள் முன்னர்
காணிகளை விடுவிக்க முப்படையினரிடம் அறிக்கை கேட்டுக்கொண்டு இருப்பது ஏற்புடையதல்ல – எம்.ஏ சுமந்திரன்

காணிகளை விடுவிக்க முப்படையினரிடம் அறிக்கை கேட்டுக்கொண்டு இருப்பது ஏற்புடையதல்ல – எம்.ஏ சுமந்திரன்

17 minutes முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In