‘கீதா கோவிந்தம்’ மற்றும் ‘டியர் காம்ரேட்’ படங்களின் மூலம் ரசிகர்களின் அபிமான ஜோடியாகவும் நிஜ ஜோடியாகவும் மாறிய விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடிக்கும் புதிய பான்-இந்தியா திரைப்படமான ‘ரணபாலி’ படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
19-ஆம் நூற்றாண்டின் பின்னணியில், குறிப்பாக 1870-களின் பிரிட்டிஷ் இந்திய ஆட்சிக்காலத்தில் நிலவிய அடக்குமுறைகள் மற்றும் பெரும் பஞ்சத்தின் காலத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இத்திரைப்படம் வரும் அக்டோபர் 16-ஆம் தேதி தசரா பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது.
இயக்குநர் ராகுல் சாங்கிருத்தியன் இயக்கத்தில் உருவாகும் இத்திரைப்படத்தில், தனது நிலத்தையும் மக்களையும் காப்பதற்காக பிரிட்டிஷ் கமிஷனரை எதிர்த்துப் போராடும் ஆக்ரோஷமான கிராமத்து கிளர்ச்சிப் போராளியாக விஜய் தேவரகொண்டாவும், ‘ஜெயம்மா’ என்ற வலுவான கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனாவும் நடித்துள்ளனர்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் டி-சீரிஸ் இணைந்து பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இப்படத்திற்கு அஜய் – அதுல் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய 5 மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகும் இத்திரைப்படத்தின் புதிய போஸ்டர் தற்போது இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.











