நாட்டில் தொடர்ந்து மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதன்படி மேல், சப்ரகமுவ, வடமேல் ஆகிய மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என கூறப்பட்டுள்ளது.











