EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்ட  ‘சிசு செரிய’ பேருந்து சேவை

வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்ட ‘சிசு செரிய’ பேருந்து சேவை

ஆனி 15, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

வட மாகாணத்தில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் உயர்கல்வி கற்கும் மாணவர்களின் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், ‘சிசு செரிய’ பேருந்து சேவை ஆரம்பித்து வைக்கும் அங்குரார்ப்பண நிகழ்வு, இன்று வவுனியாவில் இடம்பெற்றிருந்தது.

குறித்த நிகழ்வானது கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் இன்று (15-06) வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இடம்பெற்றிருந்தது.

வட மாகாணத்தின் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலுள்ள மாணவ, மாணவிகளுக்காக இதுவரை ‘சிசு செரிய’ பேருந்து சேவைகள் நடைமுறையில் இருக்கவில்லை.

இந்நிலையில், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் போக்குவரத்து அமைச்சு ஆகியன இணைந்து, முதற்கட்டத்தின் கீழ் வட மாகாணத்தினுள் 20 ‘சிசு செரிய’பேருந்துகளை இயக்குவதற்குரிய நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளன.

இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர்,

நாடளாவிய ரீதியில் அனைத்துப் பகுதிகளிலும் பாடசாலை மாணவர்களின் போக்குவரத்துக்காக 200-க்கும் மேற்பட்ட புதிய பேருந்துகளை ‘சிசு செரிய’ சேவையில் இணைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். இதற்கென ஒரு பில்லியன் ரூபாவிற்கு அண்மித்த தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

2005ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ‘சிசு செரிய’ பேருந்து சேவை, இதுவரை வட பகுதி பாடசாலை மாணவர்களுக்குக் கிடைக்கப் பெற்றிருக்கவில்லை எனவும், இதற்கு முன்னர் இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்துகள் ஊடாகவே பொதுப் போக்குவரத்துச் சேவையுடன் இணைந்து மாணவர்களின் போக்குவரத்து மேற்கொள்ளப்பட்டதாகவும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்காக இச் ‘சிசு செரிய’ பேருந்து சேவை நடைமுறைப்படுத்தப்படுவதுடன், இதன்போது மாணவர்களுக்கான போக்குவரத்துப் கட்டணத்தில் பாதி (அரைக்கட்டணம்) மாத்திரமே அறவிடப்படும் என்பதுடன், எஞ்சிய தொகையை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும்.

இந்நிகழ்வில் வன்னி மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ். திலகநாதன், ம.ஜெகதீஸ்வரன், வட மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் எஸ். விமலேஸ்வரன் மற்றும் மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டிருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

தம்புள்ளையில் பதற்றம்: இலங்கை வீரருக்கும் வைபவ் சூர்யவன்ஷிக்கும் இடையே வாக்குவாதம்!
அண்மைய செய்திகள்

தம்புள்ளையில் பதற்றம்: இலங்கை வீரருக்கும் வைபவ் சூர்யவன்ஷிக்கும் இடையே வாக்குவாதம்!

ஆனி 15, 2026
புத்தூரில் டிப்பர் வாகன  விபத்து – இளைஞன் ஒருவர் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

மொரகல்ல கடற்கரையில் நீராட சென்றவர் உயிரிழப்பு

ஆனி 15, 2026
மாகாண மட்ட கரம் போட்டியில் வெற்றி பெற்ற  வேலணை மாணவி
அண்மைய செய்திகள்

மாகாண மட்ட கரம் போட்டியில் வெற்றி பெற்ற வேலணை மாணவி

ஆனி 15, 2026
நெடுந்தீவுக்கான சேவையை  மீண்டும் ஆரம்பித்த  வடதாரகை படகு
அண்மைய செய்திகள்

நெடுந்தீவுக்கான சேவையை மீண்டும் ஆரம்பித்த வடதாரகை படகு

ஆனி 15, 2026
பலாலியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்
அண்மைய செய்திகள்

பலாலியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

ஆனி 15, 2026
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை
அண்மைய செய்திகள்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

ஆனி 15, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

சிறப்புச் செய்திகள்

சொல்லிசை பாடகரை பிணையில் செல்ல அனுமதி

சொல்லிசை பாடகரை பிணையில் செல்ல அனுமதி

3 நாட்கள் முன்னர்
யாழில்.இடம்பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டியில் பருத்தித்துறை முதலிடம்

யாழில்.இடம்பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டியில் பருத்தித்துறை முதலிடம்

5 நாட்கள் முன்னர்
மாகாண மட்ட கரம் போட்டியில் வெற்றி பெற்ற  வேலணை மாணவி

மாகாண மட்ட கரம் போட்டியில் வெற்றி பெற்ற வேலணை மாணவி

4 மணத்தியாலங்கள் முன்னர்
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

2 நாட்கள் முன்னர்
நிவாரணம் வழங்குவது குறித்து  நாமலின் கருத்து!

ஆளும்கட்சியினர் புலிகள் அமைப்பின் பாடல்களைப் பயன்படுத்திய போது ஏன் கைதாகவில்லை – நாமல் ராஜபக்ஷ

6 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In