ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரணை தொகுதியின் முன்னாள் அமைப்பாளர் சரித அபேசிங்க, சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் முன்னாள் பணிப்பாளர் அருண வருஷஹென்னதிகே மற்றும் முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகனும் சட்டத்தரணியுமான ரகித ராஜபக்ஷ ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இதன்படி இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இவர்களை ஆஜர்படுத்திய நிலையில், எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.











