EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
எல்நினோவினால் யாழ்ப்பாணத்திற்கு பாதிப்பு –  பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா

எல்நினோவினால் யாழ்ப்பாணத்திற்கு பாதிப்பு – பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா

ஆடி 12, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

மத்திய பசுபிக் பிராந்திய கடற் பகுதிகளில் இருந்து இந்த சமுத்திர கடல் பிராந்தியத்திற்கு ஊடுருவியுள்ள எல்நினோ, இம்மாதம் யூலை தொடக்கம் அக்டோபர் மாதம் வரை வெப்ப தாக்கத்தைச் செலுத்தும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியரும் கலை பீடாதிபதியுமான நாகமுத்து பிரதிபராஜா தெரிவித்தார்.

யாழ் கலட்டி வீதியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான அமைப்பு ஏற்பாடு செய்த எல்நினோ தொடர்பான விவசாய போதன ஆசிரியர்கள் மற்றும் கடத்தொழில் சார்ந்தவர்களுக்கான செயல்மர்வில் பங்கு பற்றிக் கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

இந்த சமுத்திர பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள கடல் வெப்பம் இலங்கை மற்றும் மாலைதீவில் அதிக தாக்கத்தை செலுத்த வாய்ப்புகள் உள்ளது.

இலங்கையை பொறுத்தவரையில் குறிப்பாக வட மாகாணத்தின் முல்லைத் தீவு, மன்னார், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் பாரிய நீருக்கான தட்டுப்பாட்டினை ஏற்படுத்தும்.

நிலத்தின் ஊடாக வெப்பத்தை கடத்துவதிலும் பார்க்க 16 மடங்கு வேகமாக நீரின் ஊடாக வெப்பம் கடத்தப்படுகின்ற நிலையில் இந்த சமுத்திரக் கடற்பரப்பில் ஏற்படுகின்ற கடல் வெப்ப ஏற்றம் வேகமாக ஏனைய பகுதிகளுக்கும் பரவும்.

ஜூலை தொடக்கம் செப்டம்பர் மாதம் வரையில் அதிகமான வறட்சியை ஏற்படுத்துகின்ற எல்நினோ அக்டோபர் நவம்பர் மாதங்களில் பாரிய மழைவீழ்சியையும் ஏற்படுத்தும்.

இருந்தாலும் இந்த தாழமுக்கங்கள் அக்டோபர் மாதத்திற்கு பின்னரான காலப் பகுதியிலே ஏற்படுவதற்கான சாத்தியங்கள் இருக்கும் நிலையில் அதுவரையான காலப் பகுதியில் அதிக வறட்சியே நிலவும்.

ஆகவே எல்நினோ இந்து சமுத்திரத்தை அண்மித்துள்ள நிலையில் பொதுமக்கள் நீர் முகாமைத்துவத்தை சரியாகப் பின்பற்றி அதிக வெப்பத்தினால் ஏற்படுகின்ற நீர்த்தட்டுப்பாட்டினை சமாளிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட முன் வர வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் வட மாகாண பிரதி விவசாய பணிப்பாளர் திருமதி அஞ்சனாதேவி சிறிரங்கன், யாழ் மாவட்ட கடத்தொழில் நீரியல் வள திணைக்கள உதவி பணிப்பாளர் எஸ் அகிலன் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான அமைப்பு ஜான்சன் பிரிடாரோ ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

அகில இலங்கை கம்பன் கழகத்தின் திருவள்ளுவர் திருக்கோயில் திறப்பு விழா
அண்மைய செய்திகள்

அகில இலங்கை கம்பன் கழகத்தின் திருவள்ளுவர் திருக்கோயில் திறப்பு விழா

ஆடி 12, 2026
யாழ் புகையிரத நிலையத்தை  அபிவிருத்தி செய்ய  திட்டமிட்டுள்ளோம் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க
அண்மைய செய்திகள்

யாழ் புகையிரத நிலையத்தை அபிவிருத்தி செய்ய திட்டமிட்டுள்ளோம் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

ஆடி 12, 2026
யாழ் பல்கலையில் வெளியிடப்பட்ட 10 ஆவது “நீதம்” இதழ்
அண்மைய செய்திகள்

யாழ் பல்கலையில் வெளியிடப்பட்ட 10 ஆவது “நீதம்” இதழ்

ஆடி 12, 2026
மாணவர்களிடையே சீரான போசாக்கினை கட்டி எழுப்பும் வகையிலான கண்காட்சி
அண்மைய செய்திகள்

மாணவர்களிடையே சீரான போசாக்கினை கட்டி எழுப்பும் வகையிலான கண்காட்சி

ஆடி 11, 2026
இலங்கை கடற்பரப்பில் தொடரும் இந்திய மீனவர்களின் அத்துமீறல் – என்.எம்.மொஹமட் ஆலம்
அண்மைய செய்திகள்

இலங்கை கடற்பரப்பில் தொடரும் இந்திய மீனவர்களின் அத்துமீறல் – என்.எம்.மொஹமட் ஆலம்

ஆடி 11, 2026
மாதகலில் விபத்து -முதியவர் ஒருவர்  உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

வெளிகண்டல் பகுதியில் விபத்திற்குள்ளான வாகனம் – ஒருவர் காயம்

ஆடி 11, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

2026 ஆம் ஆண்டுக்கான மனித உரிமைகள் தலைமைத்துவ மாநாடு

2026 ஆம் ஆண்டுக்கான மனித உரிமைகள் தலைமைத்துவ மாநாடு

5 நாட்கள் முன்னர்
மன்னாரில் பயிற்சி நெறிகளை நிறைவு செய்தோருக்கு சான்றிதழ் வழங்கி வைப்பு

மன்னாரில் பயிற்சி நெறிகளை நிறைவு செய்தோருக்கு சான்றிதழ் வழங்கி வைப்பு

5 நாட்கள் முன்னர்
கதிர்காமத்தை சென்றடைந்த சுப்பிரமணியம் என்றழைக்கப்படும் நாய்

கதிர்காமத்தை சென்றடைந்த சுப்பிரமணியம் என்றழைக்கப்படும் நாய்

5 நாட்கள் முன்னர்
யாழிற்கு விஜயம் மேற் கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர்

யாழிற்கு விஜயம் மேற் கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர்

5 நாட்கள் முன்னர்
மாணவர்களிடையே சீரான போசாக்கினை கட்டி எழுப்பும் வகையிலான கண்காட்சி

மாணவர்களிடையே சீரான போசாக்கினை கட்டி எழுப்பும் வகையிலான கண்காட்சி

1 நாள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In