பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் புறப்பாடு முனையத்தின் விஸ்தரிப்பு பணிகளை நிறைவு செய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
இதன்படி குறித்த ஒப்பந்தத்தை மெஸ்ஸர்ஸ் மேகா இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதில் புதிய கட்டிடம் ஒன்று நிறுவவுள்ளதுடன், இக்கட்டிடத்தில் 36 செக் – இன் கவுண்டர்கள் மற்றும் பயணிகள் முனையத்தை விமான அணுகல் பகுதிகளுடன் இணைக்கும் ஆறு நடைபாதைகள் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு 7.26 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் 3.77 பில்லியன் ரூபா என துறைமுக மற்றும் சிவில் விமான சேவை அமைச்சர் தெரிவித்துள்ளார்.











