EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
வவுனியாவில் வீடமைப்புத் திட்டங்கள் மக்களிடம் கையளிப்பு

வவுனியாவில் வீடமைப்புத் திட்டங்கள் மக்களிடம் கையளிப்பு

ஆடி 17, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

அரசாங்கத்தின் வீடமைப்புத் திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீடுகளைக் கையளிக்கும் நிகழ்வு, வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் கலாநிதி சுசில் ரணசிங்க அவர்களின் தலைமையில் இன்று (17) வவுனியாவில் நடைபெற்றது.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் நிதிப் பங்களிப்பில், ஒரு வீட்டுக்கு ஒரு மில்லியன் ரூபாய் வீதம் மீள் செலுத்த தேவையற்ற உதவித்தொகையின் கீழ், நான்கு ஏழைக் குடும்பங்களுக்கு வீடுகள் இதன்போது கையளிக்கப்பட்டன.

இத்திட்டத்திற்கு இணையாக, யுத்தத்தினால் இடம்பெயர்ந்த இரண்டு குடும்பங்களுக்காக தலா ஒரு மில்லியன் ரூபாய் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்படவுள்ள இரண்டு வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் அமைச்சரின் தலைமையில் நடைபெற்றது.

ஏழைக் குடும்பங்களுக்கு புதிய வீடுகளை அமைத்துக் கொடுக்கும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவர்களின் திட்டத்திற்கு அமைவாக, பல்வேறு கஷ்டங்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிலையானதொரு வசிப்பிடத்தை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

2026 ஆம் ஆண்டிற்காக, வவுனியா மாவட்டத்தில் வீடற்ற குடும்பங்களுக்காக 159 வீடுகளை அமைக்கும் பணிகளை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை ஆரம்பித்துள்ளதுடன், இதற்காக 159 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்த சுமார் 3000 பேருக்கு தலா 2 மில்லியன் ரூபாய் நிதியுதவியின் கீழ் வீடுகளை அமைக்கும் பணிகள் தற்போது வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ். திலகநாதன், எம். ஜெகதீஸ்வரன், வவுனியா மாவட்ட செயலாளர் பி. ஏ. சரத்சந்திர, மேலதிக மாவட்ட செயலாளர் என். கமலதாசன், பிரதேச செயலாளர்கள், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
அண்மைய செய்திகள்

நாட்டில் டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஆடி 17, 2026
வேவண்டன் தோட்ட மக்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்
அண்மைய செய்திகள்

வேவண்டன் தோட்ட மக்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்

ஆடி 17, 2026
கூட்டாக இணைவதற்கு எனக்கு விருப்பமில்லை – டக்ளஸ் தேவானந்தா
அண்மைய செய்திகள்

கூட்டாக இணைவதற்கு எனக்கு விருப்பமில்லை – டக்ளஸ் தேவானந்தா

ஆடி 17, 2026
செம்மணி மனித புதைகுழியில் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ள 11 என்பு கூட்டு தொகுதிகள்
அண்மைய செய்திகள்

செம்மணி புதைகுழிக்குள் இருந்து விரல் என்புடன் மீட்கப்பட்ட மோதிரம்

ஆடி 17, 2026
மன்னாரில் இடம்பெற்ற  ஆடிப்பிறப்பு கொண்டாட்ட நிகழ்வு
அண்மைய செய்திகள்

மன்னாரில் இடம்பெற்ற ஆடிப்பிறப்பு கொண்டாட்ட நிகழ்வு

ஆடி 17, 2026
யாழ் வலி வடக்கை உயர் பாதுகாப்பு வலயமாக்கிய வர்த்தமானியை  நீக்கு
அண்மைய செய்திகள்

யாழ் வலி வடக்கை உயர் பாதுகாப்பு வலயமாக்கிய வர்த்தமானியை நீக்கு

ஆடி 17, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

கியூபெக்கின் அமெரிக்க மதுபானங்களுக் கியூபெக்கான தடை, தங்களுக்குக் கடுமையான பொருளாதாரப் பேரழிவு – கலிபோர்னியா அரசியல்வாதிகள் கவலை

கியூபெக்கின் அமெரிக்க மதுபானங்களுக் கியூபெக்கான தடை, தங்களுக்குக் கடுமையான பொருளாதாரப் பேரழிவு – கலிபோர்னியா அரசியல்வாதிகள் கவலை

7 நாட்கள் முன்னர்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை அசைக்க முடியாது – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை அசைக்க முடியாது – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

3 நாட்கள் முன்னர்
ரெபென்டிக்னி(Repentigny) ரயில் விபத்து: நகர்ப்புறங்களில் சரக்கு ரயில்களின் வேகத்தைக் குறைக்கக் கோரி நகர சபை அவசர தீர்மானம்!

ரெபென்டிக்னி(Repentigny) ரயில் விபத்து: நகர்ப்புறங்களில் சரக்கு ரயில்களின் வேகத்தைக் குறைக்கக் கோரி நகர சபை அவசர தீர்மானம்!

2 நாட்கள் முன்னர்
எம்பிரெஸ் தியேட்டர் மறுசீரமைப்புத் திட்டம்: விபரங்களை வெளியிட அவசர வலியுறுத்தல்!

எம்பிரெஸ் தியேட்டர் மறுசீரமைப்புத் திட்டம்: விபரங்களை வெளியிட அவசர வலியுறுத்தல்!

4 நாட்கள் முன்னர்
யாழில். பெண் அரசியற்செயற்பாட்டாளர்களுக்கான AI தொழில்நுட்பப் பயிற்சி

யாழில். பெண் அரசியற்செயற்பாட்டாளர்களுக்கான AI தொழில்நுட்பப் பயிற்சி

6 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In