EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
மன்னார் மாவட்டத்தில் ‘சிசு செரிய’  பேருந்து சேவை ஆரம்பம்

மன்னார் மாவட்டத்தில் ‘சிசு செரிய’ பேருந்து சேவை ஆரம்பம்

ஆடி 28, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சேவையை மேலும் திறம்படச் செய்யும் நோக்கில், மன்னார் மாவட்டத்தில் ‘சிசு செரிய’ பேருந்து சேவை இன்று (28) கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மன்னார் மாவட்டத்திற்காக முதன்முறையாக இச் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது டன், மன்னாரிலிருந்து தலைமன்னார் வரை பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்வதற்காக முதலாவது ‘சிசு செரிய’ பேருந்து சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

2005 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ‘சிசு செரிய’ திட்டத்தின் கீழ், வடக்கு மாகாணத்தின் சில மாவட்டங்களுக்கு பேருந்துகள் ஈடுபடுத்தப் பட்டிருக்கவில்லை.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் தலையீட்டின் பேரில், 20 பேருந்துகளை ஈடுபடுத்தி ‘சிசு செரிய’ திட்டத்தின் முதற்கட்டத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மன்னாரில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்ட குறித்த சேவைக்கு மன்னார் மாவட்ட தனியார் பேரூந்து சங்கத்தின் பேரூந்து ஒன்றே பயன்படுத்தப்பட்டுள்ளது.

இங்கு கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர்,

‘சிசு செரிய’ திட்டம் ஆரம்பிக்கப்பட்டு 20 வருடங்கள் கடந்துள்ள போதிலும், மன்னார் மாவட்ட மாணவர்கள் பல வருடங்களாக பாடசாலைக்குச் செல்வதற்கான போக்குவரத்து சேவைகள் இன்றி பெரும் சிரமத்திற்கு உள்ளாகி இருந்தனர்.

அத்துடன், கடந்த கால அரசாங்கங்கள் வடபகுதி மாணவர்களைப் புறக்கணித்துச் செயற்பட்டுள்ளமை இதன் மூலம் தெளிவாகிறது.

இச் சேவையின் கீழ் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களிடமிருந்து சாதாரண கட்டணத்தில் பாதி மட்டுமே அறவிடப்படும் என்பதுடன், மீதித் தொகையை அரசாங்கம் பொறுப்பேற்கும்.

இதன் மூலம் கல்விக்காக பயணிப்போருக்கு கணிசமான நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். ஜெகதீஸ்வரன், மன்னார் மாவட்ட அரச அதிபர் கே. கனகேஸ்வரன், வடமாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் எஸ். விமலேஸ்வரன், மன்னார் மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் தர்மலிங்கம் ரமேஷ் உட்பட உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள், பாடசாலை மாணவர்கள் என பலர் கலந்துக் கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

தையிட்டியில் காணிகளை  கையளிக்கக் கோரி போராட்டம் முன்னெடுப்பு
அண்மைய செய்திகள்

தையிட்டியில் காணிகளை கையளிக்கக் கோரி போராட்டம் முன்னெடுப்பு

ஆடி 28, 2026
யாழில், இளைஞனை காரில் கடத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கியவர்கள் கைது
அண்மைய செய்திகள்

மலேசியாவில் கைதான இரத்மலானை சைமா

ஆடி 28, 2026
வவுனியா நெடுங்கேணியில் உயிரிழந்த  5 மாதக் குழந்தை
அண்மைய செய்திகள்

வவுனியா நெடுங்கேணியில் உயிரிழந்த 5 மாதக் குழந்தை

ஆடி 28, 2026
முல்லைத்தீவில் பெற்றோர்களால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்
அண்மைய செய்திகள்

முல்லைத்தீவில் பெற்றோர்களால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்

ஆடி 28, 2026
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட வீட்டுத்திட்ட பயனாளிகளை சந்தித்த பா.உ.திலகநாதன்
அண்மைய செய்திகள்

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட வீட்டுத்திட்ட பயனாளிகளை சந்தித்த பா.உ.திலகநாதன்

ஆடி 28, 2026
கிளிநொச்சியில் மக்களுக்காக திறந்து வைக்கப்பட்டுள்ள பாலம்
அண்மைய செய்திகள்

கிளிநொச்சியில் மக்களுக்காக திறந்து வைக்கப்பட்டுள்ள பாலம்

ஆடி 28, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

கிளிநொச்சியில் மக்களுக்காக திறந்து வைக்கப்பட்டுள்ள பாலம்

கிளிநொச்சியில் மக்களுக்காக திறந்து வைக்கப்பட்டுள்ள பாலம்

7 மணத்தியாலங்கள் முன்னர்
கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்ற விவசாய குழுக் கூட்டம்

கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்ற விவசாய குழுக் கூட்டம்

6 நாட்கள் முன்னர்
தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற மாணவனுக்கு விசேட பாராட்டு

தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற மாணவனுக்கு விசேட பாராட்டு

9 மணத்தியாலங்கள் முன்னர்
நீர்வேலியில் போதைப்பொருட்களுடன் கைதான  மூன்று இளைஞர்கள்

நீர்வேலியில் போதைப்பொருட்களுடன் கைதான மூன்று இளைஞர்கள்

2 நாட்கள் முன்னர்
செம்மணியில் மழை அங்கியுடனான என்புக்கூடு – தகவல் தெரிந்தால் அறிவிக்க கோரிக்கை

செம்மணியில் மழை அங்கியுடனான என்புக்கூடு – தகவல் தெரிந்தால் அறிவிக்க கோரிக்கை

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In