தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள தமது காணிகளை மீளக் கையளிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனைச் சூழவுள்ள காணிகளான தனியார் காணிகளை காணி உரிமையாளர்களிடம் மீளக் கையளிக்க வேண்டும் எனக் காணி உரிமையாளர்கள் ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஆரம்பித்துள்ள போராட்டம் நாளைய தினம் புதன்கிழமை மாலை வரையில் இரண்டு நாட்களும் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.











