EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
பங்கிபூர் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் மாபெரும் வெற்றி: முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

பங்கிபூர் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் மாபெரும் வெற்றி: முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

ஆவணி 4, 2026
வகை: உலகம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

பீகார் மாநிலத்தில் காலியாக இருந்த பங்கிபூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு சமீபத்தில் இடைத்தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை முடிவில், ஜன் சுராஜ்  கட்சியின் தலைவரும் அரசியல் வியூக வகுப்பாளருமான பிரஷாந்த் கிஷோர் 64,151 வாக்குகள் பெற்று மாபெரும் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நீரஜ் குமார் சின்ஹாவை விட 19,324 வாக்குகள் அதிகம் பெற்று பிரசாந்த் கிஷோர் அபார வெற்றி பெற்றுள்ளார்.

ஜன் சுராஜ் கட்சி தொடங்கிய பிறகு அது சந்திக்கும் முதல் தேர்தல் வெற்றியாக இது அமைந்துள்ளது. இந்த மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், பங்கிப்பூர் இடைத்தேர்தலில் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ள பிரசாந்த் கிஷோருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும், பங்கிப்பூர் தொகுதி மக்களுக்கும் பீகார் மாநில மக்களுக்கும் அவர் ஆற்றும் நற்பணிகளில் தொடர் வெற்றிபெற விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வெற்றிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரஷாந்த் கிஷோர், தான் சட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்பதால் மட்டுமே பங்கிபூர் உடனடியாக பெங்களூருவாக மாறிவிடாது என்றும், ஆனால் அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் இங்கு குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைக் காண முடியும் என்றும் கூறினார். மக்கள் தன் மீது வைத்த நம்பிக்கையைக் காப்பாற்றி, பங்கிபூர் தொகுதியை மேம்படுத்துவதே தனது முதன்மையான பணியாக இருக்கும் என்று உறுதியளித்தார்.

மேலும் அவர் பேசுகையில், இந்தத் தேர்தல் வெறும் தெருக்கள் மற்றும் வடிகால்களுக்கானது மட்டுமல்ல என்றும், பீகார் மாநிலத்தை யார் வழிநடத்த வேண்டும் என்பதற்கான செய்தி என்றும் சுட்டிக்காட்டினார்.

பீகார் மாநிலம் முன்னேறவும், மக்கள் தங்களைப் பீகாரிகள் என்று பெருமையோடு கூறிக்கொள்ளவும் தகுதியும் நல்ல குணநலன்களும் கொண்ட ஒருவரை முதலமைச்சராக நியமிக்க வேண்டும் என பாஜக தலைமைக்கு பங்கிபூர் மக்கள் வலுவான செய்தியை அனுப்பியிருப்பதாகத் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எத்தியோப்பியாவில் நிலச்சரிவு – 14 பேர் உயிரிழப்பு
உலகம்

எத்தியோப்பியாவில் நிலச்சரிவு – 14 பேர் உயிரிழப்பு

ஆவணி 5, 2026
ஹோர்முஸ் நீரிணை திறப்பு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும்
உலகம்

ஹோர்முஸ் நீரிணை திறப்பு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும்

ஆவணி 5, 2026
மேகதாதுவில் அணை கட்ட முற்றிலும் தடை விதிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு புதிய மனு!
உலகம்

மேகதாதுவில் அணை கட்ட முற்றிலும் தடை விதிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு புதிய மனு!

ஆவணி 4, 2026
EPF சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயர்வு: இந்திய மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல்!
உலகம்

EPF சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயர்வு: இந்திய மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல்!

ஆவணி 4, 2026
கிளாஸ்கோ காமன்வெல்த் 2026இல் வரலாற்றுச் சாதனை படைத்த இந்தியா!
உலகம்

கிளாஸ்கோ காமன்வெல்த் 2026இல் வரலாற்றுச் சாதனை படைத்த இந்தியா!

ஆவணி 4, 2026
“மன்னிப்பின் மூலம் தன் மகளுக்கு ஒரு புதிய வாழ்க்கை” – ஜந்தர் மந்தரில் மோடியை அவதூறாகப் பேசிய சிறுமியின் தாய்
அண்மைய செய்திகள்

“மன்னிப்பின் மூலம் தன் மகளுக்கு ஒரு புதிய வாழ்க்கை” – ஜந்தர் மந்தரில் மோடியை அவதூறாகப் பேசிய சிறுமியின் தாய்

ஆவணி 3, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

மன்னாரில் இரவு பகல் பாராது தொடர்ந்து இடம்பெறும் மின்தடை – மின் பாவனையாளர்கள் விசனம்

மன்னாரில் இரவு பகல் பாராது தொடர்ந்து இடம்பெறும் மின்தடை – மின் பாவனையாளர்கள் விசனம்

8 மணத்தியாலங்கள் முன்னர்
வவுனியா தாண்டிகுளத்தில் கப் ரக வாகனம் மோதி முதியவர் உயிரிழப்பு

வவுனியா தாண்டிகுளத்தில் கப் ரக வாகனம் மோதி முதியவர் உயிரிழப்பு

6 நாட்கள் முன்னர்
மட்டக்களப்பில் மீனவ கிராமத்து மக்களின் அவலங்களை போக்கவும் – அந்தனிசில் ராஜ்குமார் கோரிக்கை

மட்டக்களப்பில் மீனவ கிராமத்து மக்களின் அவலங்களை போக்கவும் – அந்தனிசில் ராஜ்குமார் கோரிக்கை

6 நாட்கள் முன்னர்
பலாலி விமான நிலையத்திற்கு காணி சுவீகரிக்க முயற்சி

பலாலி விமான நிலையத்திற்கு காணி சுவீகரிக்க முயற்சி

7 மணத்தியாலங்கள் முன்னர்
யாழில் வெடிகொளுத்தியவர் உயிரிழப்பு

யாழில் வெடிகொளுத்தியவர் உயிரிழப்பு

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In