வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் நடைபெற்று வரும் நிலையில், திங்கட்கிழமை மாலை எட்டாம் திருவிழா இடம்பெற்றது.
எட்டாம் திருவிழாவின் போது , வேல் பெருமான் , வள்ளி தெய்வானை ஆகியோர் மகர வாகனத்தில் எழுந்தருளி , பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்ததுடன் , தொடர்ந்து வெளிவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
நாளைய தினம் புதன்கிழமை 10ஆம் திருவிழாவான மஞ்ச திருவிழா மாலை 4.45 மணிக்கு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.











