வரலாற்று சிறப்பு மிக்க தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம் தேர் திருவிழா இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கடந்த 15ஆம் திகதி கொடியற்றத்துடன் மகோற்சவ திருவிழாக்கள் ஆரம்பமாகி, தொடர்ந்து நடைபெற்று , இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை தேர்த்திருவிழா இடம்பெற்றது.
தேர் திருவிழாவின் போது , ஆயிரக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டதுடன் , காவடிகள் எடுத்தும், கற்பூர சட்டிகள் ஏந்தியும், பிரதட்டை அடித்தும், நூறுக்கணக்கான அடியவர்கள் தமது நேர்த்தி கடன்களை நிறைவேற்றினர்
நாளைய தினம் புதன்கிழமை காலை 8.30 மணிக்கு தீர்த்த திருவிழா நடைபெற்று, மாலை 06 மணிக்கு கொடியிறக்கம் இடம்பெறவுள்ளது.











