நேபாளத்தில் பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக ஏற்கனவே 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், அந்நாட்டின் ரசுவா பகுதியை மையமாகக் கொண்டு 5.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இமயமலைப் பகுதியில் திபெத் எல்லையை ஒட்டியுள்ள கோடாரி நகருக்கு வடமேற்கே சுமார் 55 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி பதிவாகியுள்ளது.
நிலச்சரிவுகளால் பாதிக்கப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ள இப்பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட இயற்கை பேரழிவுகள், நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள மீட்புக் குழுவினருக்கும் அப்பகுதி மக்களுக்கும் பெரும் சவாலாக மாறியுள்ளன.
நேபாள-திபெத் எல்லையில் திடீரென ஏற்பட்ட கனமழை மற்றும் கோஷி ஆற்று பெருவெள்ளத்தில் இதுவரை 157 உயிரிழப்புகள் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளன.
இதில் கைலாஷ் மானசரோவர் யாத்திரை மேற்கொண்ட 133 இந்தியர்கள் உட்பட 400-க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் காணாமல் போயுள்ளனர்.
காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் நேபாள ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், சேற்றுப் பிரளயத்தில் புதைந்துள்ளவர்களை மீட்க அனைத்து அரசு இயந்திரங்களையும் முடுக்கிவிட்டுள்ளதாகப் பிரதமர் பலேந்திர ஷா அறிவித்துள்ளார்.











