நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றித் கழகத்தின் தலைவரும் தமிழக முதலமைச்சருமான விஜய், வழிபாட்டுத் தலங்களைப் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தியதாகவும், சிறு குழந்தைகளைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்தியதாகவும் கூறி அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
மேலும், தேர்தல் செலவுக் கணக்கு விவரங்களை மறைத்ததாகவும், வெளிநாடுகளில் இருந்து விதிகளை மீறி நிதி திரட்டியதாகவும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தில் முதல்வர் விஜய் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விரிவான விளக்கமளித்தார்.
பிரச்சாரங்களின்போது பொதுமக்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் வருகை தந்த குழந்தைகளைத் தவிர, தேர்தல் பணிகளுக்கோ அல்லது திட்டமிட்ட பிரச்சாரத்துக்கோ எந்தக் குழந்தையும் பயன்படுத்தப்படவில்லை என்றும், இதன் அடிப்படையில் வெற்றியைச் செல்லாது என அறிவிக்க முடியாது என்றும் தெளிவுபடுத்தப்பட்டது.
மேலும், நிதி ஆதாரங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு மனுதாரர் தரப்பில் எவ்வித உறுதியான ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்படவில்லை என வாதிடப்பட்டதைத் தொடர்ந்து, வழக்கு விசாரணை நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது.











