வடக்கு மாகாண சபைக்கும், அதன் கீழ் இயங்கும் ஒன்பது திணைக்களங்களுக்கும் 2025ஆம் ஆண்டுக்கான முனைப்பழியற்ற அபிப்பிராயம் கிடைக்கப்பெற்றமை மற்றும் இலங்கை அரச நிதிக் கணக்காளர்கள் சங்கத்தால் நடத்தப்பட்ட சிறந்த ஆண்டு அறிக்கை மற்றும் கணக்கீடுகளுக்கான போட்டியில் வடக்கு மாகாண சபையின் திணைக்களங்கள் தங்கம் மற்றும் வெண்கல விருதுகளைப் பெற்றமை ஆகியவற்றைக் கௌரவிக்கும் நிகழ்வு இன்றைய தினம் வியாழக்கிழமை வடக்கு மாகாண பிரதம செயலாளர் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக ஆளுநர் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், பிரதம உள்ளக கணக்காய்வாளர், திணைக்களத் தலைவர்கள், கணக்காய்வு மற்றும் நிதித்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.











