EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
பண்பாட்டு மரபுகளை பாதுகாக்க அரசாங்கம் தொடர்ந்தும் முக்கியத்துவம் வழங்கும் – கடற்றொழில் அமைச்சர்

பண்பாட்டு மரபுகளை பாதுகாக்க அரசாங்கம் தொடர்ந்தும் முக்கியத்துவம் வழங்கும் – கடற்றொழில் அமைச்சர்

புரட்டாதி 7, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

மாறிவரும் நவீன வாழ்க்கை முறையும், டிஜிட்டல் ஊடகங்களின் அதிகரித்த ஆதிக்கமும் இளைய தலைமுறையினரின் வாசிப்புப் பழக்கத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆழமான வாசிப்புப் பண்பாட்டை மீளக் கட்டியெழுப்புவது காலத்தின் அவசியமாகும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் சங்கிலியன் பூங்காவில் நடைபெற்று வரும் ‘யாழ்ப்பாணம் சர்வதேச புத்தகத் திருவிழா – 2026’ இந் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இன்றைய நவீன சூழலில் இளைய தலைமுறையினரின் திரைப் பயன்பாடு அதிகரித்துள்ளதன் காரணமாக, கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் புத்தக வாசிப்புப் பழக்கம் குறைவடைந்து வருகிறது.

அறிவார்ந்த சமூகத்தை உருவாக்குவதற்கும், இளைய தலைமுறையினரின் சிந்தனைத் திறனை வளர்ப்பதற்கும் வாசிப்புப் பழக்கத்தை மீண்டும் ஊக்குவிப்பது அவசியம்.

அதேவேளை, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் அறிவைப் பெற்றுக்கொள்வதையும் கற்றல் செயல்முறையையும் இலகுவாக்கியுள்ளன.

இணையத்தில் தகவல்களை மேலோட்டமாகப் பார்ப்பதும், ‘Copy-Paste’ முறையில் தகவல்களைப் பயன்படுத்துவதும் ஆழமான வாசிப்புக்கு ஒருபோதும் மாற்றாக அமையாது.

ஒரு புத்தகத்தை ஆழமாக வாசிப்பதன் மூலம் சிந்தனைத் திறன், பகுத்தறிவு, விமர்சன நோக்கு மற்றும் அறிவுப் புரிதல் ஆகியவை மேம்படுவதுடன், சமூகத்தில் பயனுள்ள கருத்துப் பரிமாற்றங்களுக்கும் ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களுக்கும் வாசிப்பு வலுவான அடித்தளத்தை அமைக்கிறது.

மேலும், தமிழ் இலக்கியங்கள், வரலாற்று ஆவணங்கள் மற்றும் எமது பண்பாட்டு மரபுகளைப் பாதுகாத்து, அவற்றை எதிர்கால சந்ததியினரிடம் கொண்டு சேர்ப்பது அனைவரினதும் பொறுப்பாகும். இத்துறைக்கு அரசாங்கம் தொடர்ந்தும் முக்கியத்துவம் வழங்கி வருகிறது.

உள்ளூர் நூலகங்களை மேம்படுத்துதல், வாசிப்பு வசதிகளை விரிவுபடுத்துதல் மற்றும் ‘நூலகம் அறக்கட்டளை’ போன்ற டிஜிட்டல் ஆவணப்படுத்தல் முயற்சிகளுக்கு தேவையான ஆதரவை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்

வாசிப்பு குறைந்து வருகிறது என்ற கவலையுடன் நாம் நின்றுவிடக் கூடாது. ஒவ்வொரு தலைமுறையிலும் புதிய வாசகர்களை உருவாக்கக்கூடிய சூழலை நாம் கட்டியெழுப்ப வேண்டும்.

அந்த வகையில், யாழ்ப்பாணம் சர்வதேச புத்தகத் திருவிழா ஒரு முக்கியமான முன்னெடுப்பாக அமைய வேண்டும் என தெரிவித்த அமைச்சர் இத்திருவிழாவின் ஏற்பாட்டாளர்களுக்கும் பங்கேற்பாளர்களுக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

ஆசிரியர் சேவைக்கான போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகள் விரைவில்
அண்மைய செய்திகள்

ஆசிரியர் சேவைக்கான போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகள் விரைவில்

புரட்டாதி 8, 2026
மட்டக்களப்பு அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு தொடர்ந்து விளக்கமறியல்
அண்மைய செய்திகள்

மட்டக்களப்பு அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு தொடர்ந்து விளக்கமறியல்

புரட்டாதி 8, 2026
யாழ். ஆயருடன் பா.உ.சிறீதரன்  முக்கிய கலந்துரையாடல்
அண்மைய செய்திகள்

யாழ். ஆயருடன் பா.உ.சிறீதரன் முக்கிய கலந்துரையாடல்

புரட்டாதி 8, 2026
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இடம்பெற்ற மாம்பழ திருவிழா
அண்மைய செய்திகள்

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர தேர்த்திருவிழா

புரட்டாதி 8, 2026
ஊர்காவற்துறை கோட்டையின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்
அண்மைய செய்திகள்

ஊர்காவற்துறை கோட்டையின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

புரட்டாதி 8, 2026
பலாலியில் உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்பட்ட வீடுகள்
அண்மைய செய்திகள்

பலாலியில் உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்பட்ட வீடுகள்

புரட்டாதி 8, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

வடக்கு மாகாண சபையின் திணைக்களங்களுக்கு விசேட  கௌரவிப்பு நிகழ்வு

வடக்கு மாகாண சபையின் திணைக்களங்களுக்கு விசேட கௌரவிப்பு நிகழ்வு

5 நாட்கள் முன்னர்
திருட்டு கும்பலின் தலைவர் ரணில் – பா.உ.கந்தசாமி பிரபு காட்டம்

திருட்டு கும்பலின் தலைவர் ரணில் – பா.உ.கந்தசாமி பிரபு காட்டம்

1 நாள் முன்னர்
கொழும்பின் பல பகுதிகளில் நீர்வெட்டு அமுல்

கொழும்பின் பல பகுதிகளில் நீர்வெட்டு அமுல்

6 நாட்கள் முன்னர்
யாழில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் முதலிடம் பெற்ற  மாணவனுக்கு கௌரவிப்பு

யாழில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் முதலிடம் பெற்ற மாணவனுக்கு கௌரவிப்பு

5 நாட்கள் முன்னர்
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இடம்பெற்ற மாம்பழ திருவிழா

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர தேர்த்திருவிழா

1 மணத்தியாலம் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In