ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் கப்பல் ஒன்று தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளதைத் தொடர்ந்து, உலகளாவிய எண்ணெய் விநியோகத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்ற அச்சம் அதிகரித்துள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைந்துள்ள ஹோர்முஸ் நீரிணையானது, உலகின் மிக முக்கியமான கடல்சார் எண்ணெய் போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றாக விளங்கி வருகின்றது.
இப்பகுதியில் இடம்பெற்றுள்ள இப்புதிய தாக்குதல் சம்பவம், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படலாம் என்ற கவலையை எண்ணெய் வர்த்தகர்கள் மற்றும் துறை சார்ந்த நிபுணர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான கப்பல் குறித்தோ அல்லது சம்பவத்தின் பின்னணி குறித்தோ மேலதிக விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.
இருப்பினும், இப் பகுதியில் அவ்வப்போது அதிகரிக்கும் பதற்ற நிலைமைகள் உலகளாவிய எரிபொருள் சந்தையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என அஞ்சப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் தொடர்பில் நிலைமை உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வருகின்றது.











