மட்டக்களப்பு கிரான் கூளாக்காடு சித்தி விநாயகர் ஆலையத்தில் உற்சவத்தின் போது வெடிக்க வைத்த வெடி வெடிக்காததை பார்க சென்ற போது அது வெடித்ததில் 13 வயது சிறுவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (11) இரவு 11.00 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.
கிரான் கூனாக்காட்டைச் சேர்ந்த நித்தியானந்தன் தனுஸ்கி என்ற 13 வயது சிறுவனே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இது பற்றி தெரியவருவதாவது,
குறித்த ஆலையத்தின் உற்சவம் இடம்பெற்றுவரும் நிலையில் சம்பவ தினமான நேற்று இரவு பூஜை வழிபாடு இடம்பெற் போது பெரிய வெடி ஒன்றை வெடிக்க வைத்தனர் அது வெடிக்காததையடுத்து அதனை தூக்கி வீசிய நிலையில் வெடிக்காத அந்; பொரிய வெடியை பார்க்க அருகில் சென்றபோது அது வெடித்ததையடுத்து படுகாயமடைநநிலையிpல் வாழைச்சேனை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
இதனையடுத்து சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.











