EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
யூடியூப் பார்த்து அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவர்-15 வயது சிறுவன் உயிரிழப்பு!

யூடியூப் பார்த்து அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவர்-15 வயது சிறுவன் உயிரிழப்பு!

புரட்டாதி 10, 2024
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

பாட்னா: பீகார் மாநிலத்தில் போலி மருத்துவர் ஒருவர், யூடியூப் பார்த்து சிறுவனுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். இதன் காரணமாக, வாந்தி, வயிற்று வலியால் சிகிச்சைக்கு வந்த 15 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம், சரண் மாவட்டம் மவுராவில் போலி மருத்துவர் அஜித்குமார் பூரி, யூடியூப் வீடியோக்களைப் பார்த்து நோயாளிக்கு சிகிச்சை அளித்து வந்ததாகக் கூறப்படுகிறது. வயிற்று வலி மற்றும் வாந்தியால் அவதிப்பட்ட சிறுவன் ஒருவனை அவனது பெற்றோர், அஜித் குமார் பூரியின் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சிறுவனுக்கு பித்தப்பையில் கல் இருந்ததாக கூறப்படுகிறது. சிறுவனின் பெற்றோரிடம், ஆபரேஷன் பற்றி எதுவும் தெரிவிக்காமல், அஜித் குமார் பூரி அறுவை சிகிச்சையைத் தொடங்கியுள்ளார்.

யூடியூப் வீடியோக்களைப் பார்த்து அறுவை சிகிச்சை செய்த நிலையில், சிறுவனின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. இதனையடுத்து, சிறுவனை உடனடியாக பாட்னா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுமாறு போலி மருத்துவர் அஜித்குமார் பூரி அறிவுறுத்தியுள்ளார். துரதிர்ஷ்டவசமாக, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதையடுத்து, போலி மருத்துவர் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள், அந்த மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றனர். உயிரிழந்த சிறுவனின் பெற்றோர் உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தங்கள் மகனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவருக்கு போதுமான அனுபவம் இல்லை என்றும் யூடியூப் பார்த்து சிகிச்சை அளித்ததாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர். இதையடுத்து, போலீசார், சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்த அஜித்குமார் பூரி மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், குற்றவாளிகளைக் கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். போலி மருத்துவரைத் தேடி காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

வடக்கு கியூபெக்கில் நிகழ்ந்த இரட்டைக்கொலை தொடர்பில் இரு சிறுவர்கள் கைது
அண்மைய செய்திகள்

யாழில். போதைப்பொருட்களுடன் இருவர் கைது

மாசி 8, 2026
கைத்துப்பாக்கி மீட்பு
அண்மைய செய்திகள்

கைத்துப்பாக்கி மீட்பு

மாசி 8, 2026
கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு இளைஞன் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு இளைஞன் உயிரிழப்பு

மாசி 7, 2026
கண்டி மாவட்டத்திற்கு நீர் வெட்டு
அண்மைய செய்திகள்

கண்டி மாவட்டத்திற்கு நீர் வெட்டு

மாசி 7, 2026
கத்திக்குத்துக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகத்தர்
அண்மைய செய்திகள்

கத்திக்குத்துக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகத்தர்

மாசி 7, 2026
வடக்கு கியூபெக்கில் நிகழ்ந்த இரட்டைக்கொலை தொடர்பில் இரு சிறுவர்கள் கைது
அண்மைய செய்திகள்

பொலிஸாரால் 524 சந்தேகநபர்கள் கைது

மாசி 7, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

செய்திகள் எதுவும் கிடைக்கவில்லை

எம்மவர் நிகழ்வுகள்

[elementor-template id=”989″]

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In