இந்த மாத தொடக்கத்தில் வான்கூவரில் கனேடியக் கொடியை எரித்து, “கனடாவுக்கு மரணம்” என மக்கள் கோஷமிட்ட பேரணியின் பின்னணியில் உள்ள பாலஸ்தீனிய சார்பு குழுவான சாமிடவுனை(Samidaun) கனடா பயங்கரவாத அமைப்பாக பட்டியலிட்டுள்ளது.
பொது பாதுகாப்பு அமைச்சர் டொமினிக் லெப்லாங்க் இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டார், மேலும் இக்குழுவை சிறப்பாக நியமிக்கப்பட்ட உலகளாவிய பயங்கரவாத அமைப்பாக பட்டியலிட அமெரிக்க கருவூலத் திணைக்களத்தின்(US Treasury Department) சொந்த முடிவோடு பயங்கரவாத அமைப்பாக பட்டியவிடப்பட்டது எனவும் குறிப்பிட்டார்.
“வன்முறை தீவிரவாதம், பயங்கரவாத செயல்கள் அல்லது பயங்கரவாத நிதியுதவிக்கு கனேடிய சமூகத்திலோ அல்லது வெளிநாட்டிலோ இடமில்லை” என்று LeBlanc ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் கனடாவின் தேசிய பாதுகாப்பு மற்றும் கனடாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் நடந்து வரும் அச்சுறுத்தலை எதிர்கொள்ள தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும் என வலுவான செய்தியை இந்த செயற்பாடு எடுத்துரைக்கிறது
சமிடூன் பயங்கரவாத அமைப்பானது முன்னர் ஜெர்மனி மற்றும் நெதர்லாந்தால் பயங்கரவாத அமைப்பாக பட்டியலிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





