சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியின் பதினாறாவது ஆண்டு குருபூசை இன்றைய தினம் புதன்கிழமை தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் அளவெட்டி கும்பிளாவளை பிள்ளையார் ஆலய குருக்கள் சிவஸ்ரீ இராமசூரிய பிரபாகரக் குருக்கள் மற்றும் மாதகல் சாந்தநாயகி சமேத சந்திர மௌலீஸ்வரர் ஆலய குருக்கள் சிவஸ்ரீ இரத்தின ஐயர் மாணிக்கவாசகக் குருக்கள் ஆகியோருக்கு மூத்த சிவாச்சாரியார்களுக்கான விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.











