வடபிராந்திய கடற்படை கட்டளைத் தளபதிக்கும் வட மாகாண ஆளுநருக்கும் இடையில் சிநேகபூர்வ சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இலங்கை கடற்படையின் வடக்கு பிராந்திய கட்டளைத் தளபதி ரியல் அத்மிரல் ரோஹித்த அபேசிங்க, வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களை, ஆளுநர் செயலகத்தில் நேற்று (26) சிநேகபூர்வ ரீதியாக சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
யாழ் குடாநாட்டு மக்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுப்பதற்கும், தீவு பகுதி மக்களுக்கான மருத்துவ வசதிகளை பெற்றுக்கொடுப்பதற்கும் இலங்கை கடற்படை முன்னெடுத்துள்ள செயற்பாடுகள் தொடர்பில்இதன்போது கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.