EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
எம்முடைய ஆதரவு ரணிலுக்கு -புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சி!

எம்முடைய ஆதரவு ரணிலுக்கு -புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சி!

ஆவணி 25, 2024
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

ரணில் நரியாக இருக்கட்டும்: அவரையே போராளிகளும் மக்களும் ஆதரிக்க வேண்டும்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுடன் பேசியே எமது பிரச்சனைகளை தீர்க்க முடியும். முன்னாள் போராளிகள் தொடர்பான 5 கோரிக்கைகளை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டுள்ளார். அதனால் ஜனாதிபதி தேர்தலில் எமது ஆதரவு ரணில் அவர்களுக்கே என புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் க. இன்பராசா தெரிவித்துள்ளார்.

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் கட்சியின் ஊடக சந்திப்பு இன்று (24.08) வவுனியா, இரண்டாம் குறுக்குதெருவில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் இடம்பெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சி அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களை சந்தித்து இருந்தோம். யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகள் கடந்தும் முன்னாள் போராளிகள் கைவிடப்பட்ட நிலையில் உள்ளனர். தமிழ் அரசியல்வாதிகள் தமக்குள் பதவிக்காக சண்டை பிடிக்கிறார்களே தவிர முன்னாள் போராளிகள் தொடர்பில் பேசுவதில்லை.

எமது முன்னாள் போராளிகளுக்கு உதவி செய்பவர்களும், வெளிநாட்டில் இருந்து எம்மோடு இணைந்து பயணிப்பவர்களும் எம்மை ரணில் விக்கிரமசிங்க அவர்களை சந்திக்க சொன்னார்கள். நாம் சந்தித்து ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து ஜனாதிபதி ரணில் விக்கிரசிங்க அவர்களுடன் பேசியிருந்தோம். இதன்போது எமது கோரிக்களை ஆழ்மனதுடன் ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி அவர்கள், நிச்சயமாக எமது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக தெரிவித்ததன் பிரகாரம் எமது கட்சி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களை ஆதரிப்பதாக முடிவெடுத்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல தடவை பிரதமராக இருந்தவர். ஜனாதிபதியாக உள்ளார். சிறந்த ராஜதந்திரி. எமது போராட்ட வரலாறு தெரியும். தற்போது சாரைப் பாம்பு போன்று நாம் உள்ள நிலையில் நாம் தான் பேச வேண்டும். ரணில் விக்கிரமசிங்கவுடன் பேசுவது தான் பொருத்தமானது. அதனால் நாம் அவரை நம்புகிறோம்.

வடக்கு கிழக்கில் உள்ள முன்னால் போராளிகளுக்கு பாதுகாப்பு வேண்டும். வீணாக போராளிகளை அழைத்து விசாரணைகள் என்ற ரீதியில் கைதுகள் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
வடக்கு கிழக்கில் உள்ள முன்னால் போராளிகளுக்கு தங்களூடாக உதவித்திட்டங்கள் மற்றும் பொருளாதார ரீதியான செயல்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகள் உட்பட ஐந்து கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். 3000 பேரின் பெயர் விபரங்களும் வழங்கியுள்ளோம். அவர்களுக்கு முதல் கட்டமாக வேலைத் திட்டங்களை வழங்குவதாக தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்க ஒரு நரி அவரிடமே நாம் பேச்சுவாதர்த்தை செய்தோம் . அந்த வளர்ப்பில் வந்தவர்கள் தான் நாங்கள். அவர் நரியோ, எலியோ, புலியோ, சிங்கமோ பிரச்சனை இல்லை. நாங்கள் அவர் மீத நம்பிக்கை வைத்துள்ளோம். நாங்கள் புலி. அவருக்கு தான் எமது வலி தெரியும். அவருடன் தான் நாம் பேச முடியும். எனவே, தமிழ் மக்களும், முன்னாள் போராளிகளும் சிலின்டர் சின்னத்துக்கு மாத்திரம் புள்ளடியிட்டு ரணில் விக்கிரமசிங்க அவர்களை வெற்றியடைய வைக்க வேண்டும் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

யாழ். கோட்டை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட  தூய்மை பணி
இலங்கை

யாழ். கோட்டை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட தூய்மை பணி

ஆவணி 8, 2026
கிளிநொச்சி தேசிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல்
அண்மைய செய்திகள்

கிளிநொச்சி தேசிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல்

ஆவணி 8, 2026
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இலங்கை

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஆவணி 8, 2026
குவைத் மற்றும் கொழும்பிற்கு இடையிலான விமான சேவை மீண்டும் ஆரம்பம்
அண்மைய செய்திகள்

குவைத் மற்றும் கொழும்பிற்கு இடையிலான விமான சேவை மீண்டும் ஆரம்பம்

ஆவணி 8, 2026
செம்மணி மனித புதைகுழியின் 101 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்று
அண்மைய செய்திகள்

செம்மணி மனித புதைகுழியின் 101 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்று

ஆவணி 8, 2026
தொண்டமானாறு  நீரேரியில் திடீரென உயிரிழக்கும் மீன்கள்
அண்மைய செய்திகள்

தொண்டமானாறு நீரேரியில் திடீரென உயிரிழக்கும் மீன்கள்

ஆவணி 8, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

வடக்கில் நான்கு மாதங்களில் 7606 நாய்களுக்கு கருத்தடை செய்ய இலக்கு

வடக்கில் நான்கு மாதங்களில் 7606 நாய்களுக்கு கருத்தடை செய்ய இலக்கு

6 நாட்கள் முன்னர்
கிளிநொச்சி தேசிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல்

கிளிநொச்சி தேசிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல்

8 மணத்தியாலங்கள் முன்னர்
கண்டாவளையில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்

கண்டாவளையில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்

4 நாட்கள் முன்னர்
கல்வி வரலாற்றில் புதிய அத்தியாயத்தை மாணவர்கள் எழுத வேண்டும் – ஆளுநர் நா.வேதநாயகன்

கல்வி வரலாற்றில் புதிய அத்தியாயத்தை மாணவர்கள் எழுத வேண்டும் – ஆளுநர் நா.வேதநாயகன்

10 மணத்தியாலங்கள் முன்னர்
பலாலி விமான நிலையத்திற்கு காணி சுவீகரிக்க முயற்சி

பலாலி விமான நிலையத்திற்கு காணி சுவீகரிக்க முயற்சி

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In