இந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நவம்பர் 25ஆம் திகதி முதல் டிசம்பர் 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று (13) கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்,
இதேபோன்று கல்வி பொது தராதர பரீட்சை இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளதோடு எதிர்வரும் காலத்தில் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார்











