அகதிகள் மீள்குடியேற்றுவது தொடர்பில் கனடிய மத்திய அரசாங்கம் முன்மொழிந்துள்ள யோசனைக்கு மாகாண அரசாங்கங்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
குறிப்பாக கியூபெக் மற்றும் ஒன்றாரியோ மாகாணங்களில் மட்டும் தற்பொழுது அகதிகள் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையை பன்முகப்படுத்தும் யோசனையை அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. எனினும் இந்த யோசனைக்கு ஏனைய மாகாண அரசாங்கங்கள் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
நியூ பிரவுன்ஸ்விக் மாகாணத்தில் சுமார் 4600 பேரை மீள்குடியேற்றுவதற்கு மத்திய அரசாங்கம் யோசனை முன் வைத்துள்ளது.
போதிய அளவு நிதி ஒதுக்கீடுகளை வழங்காது எதிலிகளை மீளக்குடியேற்ற கோருவது பொருத்தமற்றது என நியூ பிரவுண்ஸ்விக் மாகாண முதல்வர் பெலனி ஹிக்ஸ் தெரிவித்துள்ளார்.