கனடாவில் இந்த ஆண்டு காட்டுத்தீ நிலைமை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. குறிப்பாக பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் வேகமாகப் பரவிய காட்டுத்தீயால் சுமார் 150 கட்டிடங்கள் சேதமடைந்ததுடன், 20,000-க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர். மேலும் சுமார் 2,200 பேர் இன்னும் வெளியேற்ற உத்தரவின் கீழும், 25,000 பேர் வெளியேற்ற எச்சரிக்கையின் கீழும் உள்ளனர்.
இதனிடையே, கனடாவின் பல பகுதிகளில் காட்டுத்தீ அபாயம் தொடர்ந்தும் அதிகமாக காணப்படுகிறது. வறட்சி மற்றும் மிகவும் வறண்ட நிலைமைகள் தீ வேகமாகப் பரவுவதற்கான முக்கிய காரணிகளாகக் குறிப்பிடப்படுகின்றன.
மேலும், பிரிட்டிஷ் கொலம்பியாவின் Mount Revelstoke National Park பகுதியில் தீயைக் கட்டுப்படுத்த திட்டமிட்ட தீப்பரவல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அப்பகுதியில் தீ அபாய நிலை தற்போது மிகவும் அதிகமாக இருப்பதாக Parks Canada தெரிவித்துள்ளது.











