EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
யாழ்ப்பாணம்ஈ.பி.டி.பி யிடம் மாத்திரமே தமிழ் தேசிய கொள்கை உண்டு – டக்ளஸ் தேவானந்தா

யாழ்ப்பாணம்ஈ.பி.டி.பி யிடம் மாத்திரமே தமிழ் தேசிய கொள்கை உண்டு – டக்ளஸ் தேவானந்தா

கார்த்திகை 4, 2024
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியிடம் மட்டுமே கொள்கைகள் உள்ளன. ஏனைய தமிழ் கட்சிகளிடம் கொள்கை எதுவும் இல்லை வெறும் புலம்பல்கள் மட்டும் தான் உள்ளன. நல்ல தமிழ் தேசியத்தையும் முன்னெடுத்து செல்வது ஈழமக்கள் ஜனநாயக கட்சியினர் மாத்திரமே என அக் கட்சியின் செயலாளர் நாயகமும், முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சி காரியாலயத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

எமது நீண்ட கால முயற்சியின் பயனாகவே காணி விடுவிப்புக்கள் இடம்பெற்று அண்மையில் பலாலி – அச்சுவேலி வீதியும் திறக்கப்பட்டது. குறித்த வீதி கடந்த ஆட்சி காலத்தில் விடுவிக்கப்படவிருந்த நிலையில் , ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு காரணமாக அப்போது சாத்தியமாகவில்லை. தற்போது அந்த வீதி திறந்து விடப்பட்டுள்ளது.

அண்மையில் புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை நேரில் சந்தித்தேன். அதன் போது வனஜீவராசிகள் திணைக்களம் , தொல்லியல் திணைக்களம் உள்ளிட்டவற்றின் ஆக்கிரமிப்புக்கள் தொடர்பில் பேசி இருந்தேன். அதற்கு ஜனாதிபதி எங்களை விட உங்களுக்கு தான் வடக்கில் உள்ள பிரச்சனைகள் தொடர்பில் பரீட்சயம் , நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் அது தொடர்பில் பேசி முடிவுகளை எடுப்போம் என தெரிவித்தார்.

அதேவேளை ஜனாதிபதியை நான் சந்தித்த போது , 38 கோரிக்கைகளை முன் வைத்திருந்தேன். ஆனால் சிலர் சென்று மதுபான சாலைக்கான அனுமதிகளை பெற்றவர்களின் பெயர் விபரங்களை வெளியிட கோரியும் இன்னும் சிலர் அதனை வெளியிட வேண்டாம் என கோரியுமே ஜனாதிபதியை சந்தித்து கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.

ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் மாத்திரமே கொள்கை இருக்கின்றது. 1990ஆம் ஆண்டில் இருந்து , மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என கூறி வருகிறோம். அது மட்டுமின்றி 13ஆம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு கோரி வந்தோம். அதனை அப்போது அரசியல் கட்சிகளும் , போராட்ட இயக்கங்களும் மறுத்து வந்தனர். 13ஆம் திருத்தத்தை தும்பு தடியால் கூட தொட மாட்டோம் என்றனர்.

மாகாண சபை முறைமையை தும்பு தடியால் கூட தொட மாட்டோம் என கூறியவர்கள் தான் மாகாண சபை தேர்தல் அறிவித்த உடன் , தேர்தலில் போட்டியிட்டு, தமிழ் மக்களை உசுப்பேற்றி மாகாண சபையில் ஆட்சியை அமைத்தனர்.

பின்னர் மாகாண சபையில் எதுவும் செய்யாது, அவர் கள்ளர் இவர் கள்ளர் என தங்களுக்குள் குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.

தமிழர்களின் பிரச்சனை சோறா ? சுதந்திரமா ? என வந்த போது சுதந்திரமே என போராடி , சோறும் இல்லை. சுதந்திரமும் இல்லாமல் போனது எங்களை பொறுத்த வரையில் சோறும் முக்கியம் , சுதந்திரமும் முக்கியம்.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தை அப்போதே நடைமுறைப்படுத்தி இருந்தால் , தமிழ் மக்கள் இழப்புக்களை சந்திக்க வேண்டி வந்திருக்காது.

கடந்த 30 வருடங்களுக்கு மேலாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளேன். மக்கள் எங்கள் கொள்கைக்காக தான் வாக்களித்து வருகின்றனர். ஈ.பி.டி.பி மீது இருந்த பயத்தினால் தான் புலிகள் தமிழ் தேசிய கூட்டமைப்பினை உருவாக்கினார்கள்.

எங்களை பொறுத்தவரையில் மூன்று “அ ” க்கள் உள்ளன. ஒன்று அன்றாட பிரச்சனை , மற்றையது அபிவிருத்தி , மற்றையது அரசியல் தீர்வு இந்த மூன்று “அ ” க்களே முக்கியமானவை.

ஜே.வி.பி யினர் ஆயுத போராட்டம் வழியாக இடது சாரி பாரம்பரியத்தில் வந்தவர்கள். அதேபோல ஈ.பி.டி.பி யினரும் இடது சாரி பின்னணியில் இருந்து வந்தவர்கள் தான்.

நாமும் இந்த முறை தேசிய நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் முகமாகவே கொழும்பு , புத்தளம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் தேர்தலில் போட்டியிடுகிறோம். நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் தான் ஆட்சியில் பங்கெடுப்பதா இல்லையா என்ற முடிவினை எடுக்கவுள்ளோம்.

நாமும் தமிழ் தேசிய நிலைப்பாட்டில் தான் உள்ளோம். எமது நிலைப்பாடு ” குட் கொலஸ்ரோல்’ ஏனைய கட்சியின் தமிழ் தேசியமானது “பாட் கொலஸ்ரோல்” ஆகும் என மேலும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

யாழ். கோட்டை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட  தூய்மை பணி
இலங்கை

யாழ். கோட்டை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட தூய்மை பணி

ஆவணி 8, 2026
கிளிநொச்சி தேசிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல்
அண்மைய செய்திகள்

கிளிநொச்சி தேசிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல்

ஆவணி 8, 2026
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இலங்கை

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஆவணி 8, 2026
குவைத் மற்றும் கொழும்பிற்கு இடையிலான விமான சேவை மீண்டும் ஆரம்பம்
அண்மைய செய்திகள்

குவைத் மற்றும் கொழும்பிற்கு இடையிலான விமான சேவை மீண்டும் ஆரம்பம்

ஆவணி 8, 2026
செம்மணி மனித புதைகுழியின் 101 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்று
அண்மைய செய்திகள்

செம்மணி மனித புதைகுழியின் 101 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்று

ஆவணி 8, 2026
தொண்டமானாறு  நீரேரியில் திடீரென உயிரிழக்கும் மீன்கள்
அண்மைய செய்திகள்

தொண்டமானாறு நீரேரியில் திடீரென உயிரிழக்கும் மீன்கள்

ஆவணி 8, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

செம்மணி மனித புதைகுழியின் 101 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்று

செம்மணி மனித புதைகுழியின் 101 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்று

9 மணத்தியாலங்கள் முன்னர்
சிறுவனுக்கு  அதிக கட்டணம் அறவீடு செய்த தனியார் பேருந்து நடத்துனருக்கு ஒரு வார  பணித்தடை

சிறுவனுக்கு அதிக கட்டணம் அறவீடு செய்த தனியார் பேருந்து நடத்துனருக்கு ஒரு வார பணித்தடை

3 நாட்கள் முன்னர்
ஸ்பெயின் அருகே நடுக்கடலில் பழுதான படகு: 15 நாட்கள் உணவு, தண்ணீரின்றி அகதிகள் பலி

ஸ்பெயின் அருகே நடுக்கடலில் பழுதான படகு: 15 நாட்கள் உணவு, தண்ணீரின்றி அகதிகள் பலி

3 நாட்கள் முன்னர்
ஹட்டன் டிக்கோயா பகுதியில் வெள்ளம்

ஹட்டன் டிக்கோயா பகுதியில் வெள்ளம்

5 நாட்கள் முன்னர்
கண்டாவளையில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்

கண்டாவளையில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In