ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்களால் புதிய அரசாங்கத்திற்க்கான அமைச்சரவை நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி 21 அமைச்சர்கள் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து பதவி பிரமாணம் செய்துக் கொண்டனர்.
நாட்டின் ஜனாதிபதிக்கு அடுத்து பிரதமர் பாரிய பொறுப்புகளை கொண்டவர் இந்நிலையில் புதிய பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டார்.
உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சராக பிரதமர் ஹரிணி அமரசூரிய பதவி பிரமாணம் செய்தார்.
வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலை வாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக விஜித்த ஹேரத்தும் , நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சராக ஹர்ஷன நாணயக்காரவும் , உள்நாட்டு அலுவல்கள், உள்ளூராட்சி சபைகள், மாகாண சபைகள் அமைச்சராக சந்தன அபேரத்னவும் பதவி பிரமாணம் செய்துக்க கொண்டனர்.
மேலும் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சராக சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களும், விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்பாசன அமைச்சராக கே.டி. லால்காந்தவும், நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சராக அநுர கருணாதிலகவும், இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுதுறை அமைச்சராக சுனில் குமார கமகேவும் பதவி பிரமாணம் செய்துக் கொண்டனர்.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சராக ராமலிங்கம் சந்திரசேகர், கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சராக உபாலி பன்னிலகே, கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சராக சுனில் ஹந்துன்னெத்தி, பொதுமக்கள் பாதுகாப்பு, நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சராக ஆனந்த விஜேபால, போக்குவரத்து, பெருந்தெருக்கள், துறைமுக மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சராக பிமல் ரத்நாயக்க ஆகியோர் பதவி பிரமாணம் செய்துக் கொண்டனர்.
சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சராக Dr. நலிந்த ஜயதிஸ்ஸவும், புத்தசாசன, சமய விவகாரங்கள் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சராக பேராசிரியர் ஹினிதும சுனில் செனாவியும்,
பெருந்தோட்ட, சமூக உட்கட்டமைப்பு அமைச்சராக சமந்த வித்யாரத்ன அவர்களும் வர்த்தக, உணவு பாதுகாப்பு, கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சராக வசந்த சமரசிங்கவும், விஞ்ஞான மற்றும் தொழில் நுட்பவியல் அமைச்சராக பேராசிரியர் கிரிஷாந்த சில்வாவும் பதவி பிரமாணம் செய்துக் கொண்டனர்.
சக்தி வலு அமைச்சராக குமார ஜயகொடியும் , சுற்றாடல் அமைச்சராக கலாநிதி தம்மிக பட்டபதி மற்றும் தொழில் அமைச்சராக அனில் ஜயந்த ஃபெர்ணாண்டோ ஆகியோரும் பதவியேற்றுக் கொண்டனர்.