பத்தரமுல்ல பெலவத்தை குடிவரவு குடியகழ்வு திணைக்களத்திற்கு 12 பெண்கள் உட்பட 18 பேர் பொய்யான ஆவணங்களுடன் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக நேற்று (19) வந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்வதற்காக போலி இலக்கங்கள் மற்றும் உத்தியோகபூர்வ முத்திரைகள் கொண்ட ஆவணங்களை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு சமர்ப்பித்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணைகளின் போது சந்தேகநபர்களுக்கு யாரால் இந்த போலி ஆவணங்களை தயாரித்து கொடுக்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை எனவும், மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர்கள் மிரிஹான தலைமையக பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் விசேட மோசடி விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.