EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
தனக்காக மட்டும் வாழாமல் சமூகத்துக்காக வாழ்ந்த அற்புத மனிதர் கிருபாகரன்.

தனக்காக மட்டும் வாழாமல் சமூகத்துக்காக வாழ்ந்த அற்புத மனிதர் கிருபாகரன்.

மார்கழி 1, 2024
வகை: இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

சமூகசேவையாளர் கிருபாகரன் தனக்காக மட்டும் வாழாமல் தான் சார்ந்தவர்களுக்காகவும், சமூகத்துக்காகவும் குறிப்பாக ஈழ சினிமாவின் வளர்ச்சிக்காகவும் அரும்பாடு பட்டவர் என மூத்த நடிகரும், இளைப்பாறிய வங்கி முகாமையாளருமான மகேந்திரசிங்கம் தெரிவித்தார்.

அண்மையில் மறைந்த பிரபல தொழிலதிபர், சமூக சேவையாளர் அழகுசுந்தரம் கிருபாகரனுக்கான அஞ்சலி நிகழ்வு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ். கோண்டாவிலில் அமைந்துள்ள BCI கல்லூரியில் இடம்பெற்றது.

அக வணக்கத்துடன் ஆரம்பமான அஞ்சலி நிகழ்வில் அமரர் கிருபாகரனின் திருவுருவப்படத்திற்கு மூத்த நடிகர் மகேந்திரசிங்கம் மலர் மாலை அணிவித்தார்.

தொடர்ந்து நடிகரும், திரைப்படத்தயாரிப்பாளருமான சபேசன் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் கலந்து கொண்ட அனைவரும் மெழுகு தீபம் ஏற்றி, பூக்கள் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதில் சினிமா கலைஞர்கள், அமரர் கிருபாகரனின் நண்பர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர். குறித்த அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்ட மூத்த நடிகரும், இளைப்பாறிய வங்கி முகாமையாளருமான மகேந்திரசிங்கம் கருத்து தெரிவிக்கையில்,

சமூகசேவையாளர் கிருபாகரன் தனக்காக மட்டும் வாழாமல் தான் சார்ந்தவர்களுக்காகவும், சமூகத்துக்காகவும் குறிப்பாக ஈழ சினிமாவின் வளர்ச்சிக்காகவும் அரும்பாடுபட்டவர் என தெரிவித்தார்.

தொடர்ந்து நடிகர் சபேசன் கருத்து தெரிவிக்கையில், கிருபாகரனின் இழப்பு என்பது எமது சமூகத்தில் நிரப்பப்பட முடியாத வெற்றிடம். அந்த வெற்றிடத்தை ஈழ சினிமா கலைஞர்கள் நன்கு உணர்வார்கள். பல ஈழ சினிமா கலைஞர்களின் படைப்புக்கள் வெளிவருவதற்கு பெருந்துணையாக இருந்தவர் அவர். எனவே, நன்றி மறக்காமல் அஞ்சலிப்பது கலைஞர்கள் ஒவ்வொருவருடைய கடமை என குறிப்பிட்டார்.

நடிகர் ஜெராட் நோயல், நடிகர் இதயராஜ், ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் ரெஜி செல்வராசா உள்ளிட்ட கலைஞர்களும் அமரர் கிருபாகரன் தொடர்பிலான தங்கள் நினைவலைகளை பகிர்ந்து கொண்டனர்.

அமரர் கிருபாகரன் முன்னெடுத்த சமூகப்பணிகளை அவர் நிறுவனம் சார்ந்தவர்கள் இடைவிடாது தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும். அது சமூகத்துக்கு பேருதவியாக இருக்கும் என்ற விண்ணப்பத்தை ஊடகவியலாளரும், சினிமா செயற்பாட்டாளருமான வரோதயன் முன்வைத்திருந்தார்.

இந்த அஞ்சலி நிகழ்வை ஈழ சினிமா கலைஞர்கள் சார்ந்து செயற்படும் குவியம் ஊடகமும் Betta College International உம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

மன்னாரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வடை தயாரிப்பு நிலையம் மூடல்
அண்மைய செய்திகள்

மன்னாரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வடை தயாரிப்பு நிலையம் மூடல்

ஆனி 23, 2026
யாழ். சர்வதேச விமான நிலையத்தில் நடராஜர் சிலையை பிரதிஷ்டை செய்யுங்கள் – சீ.வி.கே சிவஞானம்
அண்மைய செய்திகள்

யாழ். சர்வதேச விமான நிலையத்தில் நடராஜர் சிலையை பிரதிஷ்டை செய்யுங்கள் – சீ.வி.கே சிவஞானம்

ஆனி 23, 2026
பருத்தித்துறை வெளிச்ச வீட்டு பகுதியை இராணுவத்திடமிருந்து விடுவிக்க நடவடிக்கை
அண்மைய செய்திகள்

பருத்தித்துறை வெளிச்ச வீட்டு பகுதியை இராணுவத்திடமிருந்து விடுவிக்க நடவடிக்கை

ஆனி 23, 2026
கிளிநொச்சியில்  மீண்டும் கரும்பு செய்கை ஆரம்பம்
அண்மைய செய்திகள்

கிளிநொச்சியில் மீண்டும் கரும்பு செய்கை ஆரம்பம்

ஆனி 23, 2026
யாழில். சட்டத்தரணிகளை சந்தித்த நீதி அமைச்சர்
அண்மைய செய்திகள்

யாழில். சட்டத்தரணிகளை சந்தித்த நீதி அமைச்சர்

ஆனி 23, 2026
யாழில் வேலையற்ற பட்டதாரிகளால் முன்னெடுக்கப்படும்  போராட்டம்
அண்மைய செய்திகள்

யாழில் வேலையற்ற பட்டதாரிகளால் முன்னெடுக்கப்படும் போராட்டம்

ஆனி 23, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

யாழில் இடம்பெற்ற ஈழத்தமிழர் அரசியலமைப்புப் பொதுக் கூட்டம்

யாழில் இடம்பெற்ற ஈழத்தமிழர் அரசியலமைப்புப் பொதுக் கூட்டம்

2 நாட்கள் முன்னர்
மொண்ட்ரியலில்  வணிக வளாகத்தில் மோதல் – 42 வயது நபர் உயிரிழப்பு

மொண்ட்ரியலில் வணிக வளாகத்தில் மோதல் – 42 வயது நபர் உயிரிழப்பு

6 நாட்கள் முன்னர்
மொண்ட்ரியல் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற விசாரணை – குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை

மொண்ட்ரியல் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற விசாரணை – குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை

4 நாட்கள் முன்னர்
இலங்கை வருகின்றார் ஓதுவார் சுவாமிநாதன்

இலங்கை வருகின்றார் ஓதுவார் சுவாமிநாதன்

5 நாட்கள் முன்னர்
யாழ். சர்வதேச விமான நிலையத்தில் நடராஜர் சிலையை பிரதிஷ்டை செய்யுங்கள் – சீ.வி.கே சிவஞானம்

யாழ். சர்வதேச விமான நிலையத்தில் நடராஜர் சிலையை பிரதிஷ்டை செய்யுங்கள் – சீ.வி.கே சிவஞானம்

14 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In