விடுமுறை வேதாகம பாடசாலையும், சிறுவர் விழிப்புணர்வும் இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது.
தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தினால் முன்னெடுக்கப்படும் குறித்த சிறுவர் பணி கடந்த சில ஆண்டுகளாக இடம்பெறவில்லை. கொவிட் காரணமாக இடம்பெறாத குறித்த பணி இவ்வருடம் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் இடம்பெற்றது.
தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண பேராயர் அதி. வண கலாநிதி V.பத்மதயாளன் தலைமையில் குறித்த நிகழ்வு கடந்த 3 நாட்களாக இடம்பெற்றது.
இறுதிநாளான இன்று சிறுவர் விழிப்புணர்வு ஊர்வலம் இடம்பெற்றதுடன், கலைநிகழ்வுகளும் இடம்பெற்று பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.











