EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
ஆண்டான்குளம் கிராமத்தின் குறைபாடுகள் குறித்து ரவிகரன் எம்.பி ஆராய்வு.

ஆண்டான்குளம் கிராமத்தின் குறைபாடுகள் குறித்து ரவிகரன் எம்.பி ஆராய்வு.

மார்கழி 9, 2024
வகை: இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
A A
Share on FacebookShare on Twitter

முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேசசெயலகப் பிரிவிற்குட்பட்ட தமிழர்களின் பூர்வீக கிராமமான ஆண்டான் குளம் கிராமத்தின் குறைபாடுகள் தொடர்பில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேரடியாகச் சென்று கேட்டறிந்ததுடன், ஆண்டான் குளம் ஆதி ஐயனார் ஆலயத்தில் வழிபாடுகளிலும் ஈடுபட்டிருந்தார்.

குறித்த ஆண்டான்குளம் கிராமத்தில் வாழ்ந்த தமிழ் மக்கள் கடந்த 1984ஆம் ஆண்டு அங்கிருந்து இடம்பெயர்ந்த நிலையில் தற்போது வரையில் அவர்கள் மீளக்குடியமர்த்தப்படவில்லை. இருப்பினும் அங்குள்ள தமது விவசாய நிலங்களில் தமிழ்மக்கள் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதுடன், கால்நடைவளர்ப்பு, நன்னீர் மீன்பிடி போன்ற செயற்பாடுகளிலும் ஈடுபட்டுவருகின்றனர்.

அந்தவகையில் குறித்த பகுதியில் விவசாய, கால்நடைவளர்ப்பு, நன்னீர்மீன்பிடி போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் மக்களுடைய இடர்பாடுகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கேட்டறிந்தார்.

குறிப்பாக குமுழமுனை நாகதம்பிரான் ஆலய சந்தியிலிருந்து, ஆண்டான்குளம் ஐயனார் கோவில்வரையிலான வீதிமற்றும், குறித்த வீதியில் இருக்கும் இரண்டு பாலங்கள் சீரின்றிக் காணப்படுகின்றது.

அத்தோடு ஆண்டான்குளத்திலிருந்து நித்தகைக்குளம் வரையிலான வீதி மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் பெரியவெளி, ஆத்தங்கடவை, ஆண்டான்குளம், விண்ணாங்கம்வெளி, நித்தகைக்குளம், ஆலடிக்குளம், படலைக்கல்லு, திருக்கோணம்வயல், பூவரசம்வெளி ஆகிய வயல் நிலங்களில் சுமார் 2000ஏக்கருக்கும்மேல் நெற்பயிற்செய்கை மேற்கொண்டுள்ள விவசாயிகள் பலத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

குறிப்பாக விவசாயத்திற்கான உள்ளீடுகளைக் கொண்டு செல்லும் போதும், வயல் காவலுக்கு செல்லும் போதும், அறுவடையின் பின்னர் நெல்லைக் கொண்டுவருவதிலும் விவசாயிகள் பலத்த போக்குவரத்து இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவருகின்றனர்.

அதேபோல் அப்பகுதியிலுள்ள கால்நடைவளர்ப்பாளர்களும், நன்னீர் மீன்பிடியில் ஈடுபடுபவர்களும் இவ்வாறான போக்குவரத்து சிக்கல்களுக்கு முகங்கொடுத்துவருகின்றனர்.

இந்நிலையில் குறித்த வீதிகளையும், பாலங்களையும் சீரமைத்துத் தருமாறு அப்பகுதி மக்களால் பாரளுமன்ற உறுப்பினர் ரவிகரனிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இந் நிலையில் அப்பகுதிய மக்களின் குறைபாடுகளைக் கேட்டறிந்த பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆண்டான்குளம் பகுதி மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், அவர்களது மீள்குடியேற்றம் தொடர்பிலும் தம்மால் கூடிய கவனம் செலுத்தப்படுமெனத் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக இயற்றப்படவுள்ள  புதிய சட்டமூலம்
அண்மைய செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக இயற்றப்படவுள்ள புதிய சட்டமூலம்

தை 12, 2026
யாழில். ஐஸ் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது
அண்மைய செய்திகள்

யாழில். ஐஸ் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது

தை 12, 2026
கிளிநொச்சி முரசு மோட்டை பகுதியில் கோர விபத்து
அண்மைய செய்திகள்

கிளிநொச்சி முரசு மோட்டை பகுதியில் கோர விபத்து

தை 12, 2026
நைனாமடை பாலத்தினருகில் மிதந்த நிலையில் யுவதி சடலமாக மீட்பு!
இலங்கை

கிளிநொச்சியை சேர்ந்த இளம் குடும்பப் பெண் உயிரிழப்பு

தை 12, 2026
மட்டக்களப்பில் திருடிய குற்றச்சாட்டில் ஒரு பெண் உட்பட மூவர் கைது
அண்மைய செய்திகள்

மட்டக்களப்பில் திருடிய குற்றச்சாட்டில் ஒரு பெண் உட்பட மூவர் கைது

தை 12, 2026
வெளிநாட்டு சிகரெட் தொகையுடன் ஒருவர் கைது!
அண்மைய செய்திகள்

மருதங்கேணியில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

தை 12, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

கொழும்பு கங்காராம  விகாராதிபதியை சந்தித்த டக்ளஸ் தேவானந்தா

கொழும்பு கங்காராம விகாராதிபதியை சந்தித்த டக்ளஸ் தேவானந்தா

1 நாள் முன்னர்
லஞ்ச் சீட் பாவனைக்கு  தடை விதிப்பு

லஞ்ச் சீட் பாவனைக்கு தடை விதிப்பு

2 நாட்கள் முன்னர்
ஆரம்பமாகும் கச்சதீவு திருவிழா

ஆரம்பமாகும் கச்சதீவு திருவிழா

4 நாட்கள் முன்னர்
பிரதமருக்கும் தமிழரசுக்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பு

பிரதமருக்கும் தமிழரசுக்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பு

3 நாட்கள் முன்னர்
பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக இயற்றப்படவுள்ள  புதிய சட்டமூலம்

பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக இயற்றப்படவுள்ள புதிய சட்டமூலம்

10 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In