EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
வள்ளிபுனத்தில் போதையில் பெண்களைத் தாக்கிய இளைஞர் குழுவை உடனடியாக கைது செய்க –  ரவிகரன் எம்.பி வலியுறுத்தல்

வள்ளிபுனத்தில் போதையில் பெண்களைத் தாக்கிய இளைஞர் குழுவை உடனடியாக கைது செய்க – ரவிகரன் எம்.பி வலியுறுத்தல்

சித்திரை 6, 2025
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ்பிரிவிற்குட்பட்ட வள்ளிபுனம் பகுதியில் கடந்த 02.04.2025 அன்று அப்பகுதியில் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் இளைஞர் குழுவினர் மதுபோதையில் அப்பகுதிப் பெண்கள் சிலரைத் தாக்கியுள்ளனர்.

இந் நிலையில் இன்றையதினம் குறித்த பகுதிக்கு நேரடியாகச் சென்ற வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பாதிக்கப்பட்ட பெண்களிடம் நிலமைகளைக் கேட்டறிந்ததுடன், உடனடியாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலயம் சென்று குறித்த தாக்குதலுடன் தொடர்புடைய சட்டவிரோத செயற்பாடுகளுடன் தொடர்புடைய அந்த இளைஞர்குழுவை கைது செய்யுமாறு புதுக்குடியிருப்பு பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் வலியுறுத்தியிருந்தார்.

இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வள்ளிபுனம் பகுதியில், சட்டவிரோத போதைப்பொருள் விற்பனை உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் இளைஞர் குழுவால் தொடர்ந்தும் அப்பகுதிமக்கள் பல்வேறு இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 02.04.2025அன்று மாலைவேளை வள்ளிபுனம் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் அப்பகுதியைச்சேர்ந்த மகளிர் சுயசேமிப்பு கொத்தணி குழு ஒன்றினுடைய கூட்டமொன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது அவ்வீட்டின் அருகே செல்லும் வீதியால் வருகைதந்த, அப்பகுதியில் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் குறித்த இளைஞர்குழு, கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த பெண்களை தகாத வார்த்தையால் திட்டியதுடன், குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த பெண்கள் சிலரை கடுமையாகத் தாக்கியுமுள்ளனர்.

அதிலும் குறிப்பாக தலைக்கவசத்தினால் ஒரு பெண்ணின் தலைப்பகுதி மிகக் கடுமையாகத் தாக்கப்பட்டதாகவும் இந்த விடயம் நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதுடன், தாக்குதலுக்கு பயன்படுத்திய தலைக்கவசமும் இதன்போது காண்பிக்கப்பட்டது.

இந் நிலையில் இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண்களால் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதற்கமைய, தாக்குதலுடன் தொடர்புடைய நால்வரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். எனினும் தாக்குதலுடன் தொடர்புடைய ஏனைய மூவர் இதுவரை கைது செய்யப்படவில்லை.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட தரப்பினரின் நிலமைகளைக் கேட்டறிந்த நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் உடனடியாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையம் சென்று தாக்குதலுடன் தொடர்புடைய ஏனைய மூவரையும் கைது செய்யுமாறு புதுக்குடியிருப்பு பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் வலியுறுத்தியதுடன், அப்பகுதியில் சட்டவிரோத செயற்பாட்டாளர்களால் மேற்கொள்ளப்படும் தொடர்ச்சியான அச்சுறுத்தல் நிலைமையினைக் கட்டுப்படுத்துமாறும் வலியுறுத்தினார்.

இந் நிலையில் இத்தாக்குதல் செயற்பாடுகளுடன் தொடர்புடைய ஏனைய மூவரையும் கைது செய்ய உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக புதுக்குடியிருப்பு பொலிஸ்நிலையப் பொறுப்பதிகாரி நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களிடம் தெரிவித்ததுடன், அப்பகுதியில் சட்டவிரோத செயற்பாட்டாளர்களால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் அச்சுறுத்தல் நிலமைகளைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

யாழ்.போதனா வைத்தியசாலை முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம்
அண்மைய செய்திகள்

யாழ்.போதனா வைத்தியசாலை முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

ஆனி 5, 2026
லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள அறிவித்தல்
அண்மைய செய்திகள்

லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள அறிவித்தல்

ஆனி 5, 2026
மட்டக்களப்பில் போலி தங்க ஆபரணங்களை வடிவமைத்தவர் கைது
அண்மைய செய்திகள்

மட்டக்களப்பில் போலி தங்க ஆபரணங்களை வடிவமைத்தவர் கைது

ஆனி 5, 2026
நாட்டில் கடும் காற்று வீசக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம்
அண்மைய செய்திகள்

நாட்டில் கடும் காற்று வீசக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம்

ஆனி 5, 2026
மன்னாரில் இடம்பெற்ற  கண்டல் தாவர நடுகை நிகழ்வு
அண்மைய செய்திகள்

மன்னாரில் இடம்பெற்ற கண்டல் தாவர நடுகை நிகழ்வு

ஆனி 5, 2026
செம்மணி மனித புதைகுழியில் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ள 11 என்பு கூட்டு தொகுதிகள்
அண்மைய செய்திகள்

செம்மணி மனித புதைகுழியில் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ள 11 என்பு கூட்டு தொகுதிகள்

ஆனி 5, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

மன்னாரில் இடம்பெற்ற  கண்டல் தாவர நடுகை நிகழ்வு

மன்னாரில் இடம்பெற்ற கண்டல் தாவர நடுகை நிகழ்வு

14 மணத்தியாலங்கள் முன்னர்
மன்னாரில் கைவிடப்பட்ட  கத்தோலிக்க ஆலயத்தில் புதையல் வேட்டை

மன்னாரில் கைவிடப்பட்ட கத்தோலிக்க ஆலயத்தில் புதையல் வேட்டை

14 மணத்தியாலங்கள் முன்னர்
தியாகி பொன் சிவகுமாரனின் 52 ஆம் ஆண்டு நிறைவு விழா

தியாகி பொன் சிவகுமாரனின் 52 ஆம் ஆண்டு நிறைவு விழா

14 மணத்தியாலங்கள் முன்னர்
ஒட்டுசுட்டான் பிரதேச வைத்தியசாலை வளாகத்தில் 300 மரக்கன்றுகள் நாட்டி வைப்பு

ஒட்டுசுட்டான் பிரதேச வைத்தியசாலை வளாகத்தில் 300 மரக்கன்றுகள் நாட்டி வைப்பு

14 மணத்தியாலங்கள் முன்னர்
செம்மணி மனித புதைகுழியில் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ள 11 என்பு கூட்டு தொகுதிகள்

செம்மணி மனித புதைகுழியில் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ள 11 என்பு கூட்டு தொகுதிகள்

14 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In