ஒட்டாவாவில் உள்ள ஒரு பள்ளியின் கழிப்பறையில், LGBTQ+ சமூகத்தை இலக்காகக் கொண்ட வெறுப்பு மற்றும் அச்சுறுத்தும் ஓவியம் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் பெரும் அதிர்ச்சியையும் ஆழ்ந்த கவலையையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
மரண அச்சுறுத்தலை உள்ளடக்கியிருந்த இந்த வெறுப்பு சார் ஓவியம் குறித்து ஒட்டாவா-கார்லெடன் மாவட்ட பள்ளிச்சபையால் காவல்துறைக்கு அறிவிக்கப்பட்டது.
காவல்துறையின் ”வெறுப்பு மற்றும் பாரபட்சக் குற்றப் பிரிவு”, தற்போது இந்தச் சம்பவத்தை விசாரித்து வருகிறது.











